‘நுவரெலியாவில் இருந்து மாலைதீவுக்கு மரக்கறி ஏற்றுமதி’ – தூதுவருடன் ஜீவன் பேச்சு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துள் ரசாக்குக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் விவசாய துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மாலைதீவுக்கு மரக்கறி வகைகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறமை மேம்படுத்துவதற்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles