சந்தா வாங்காத சங்கத்தை ஆரம்பித்தார் திலகர்!

தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா சேகரித்து அமைக்கப்பட்ட தொழிற்சங்க கலாசாரத்தின் ஊடாக வளர்த்தெடுக்கப்பட்டதே மலையக அரசியல் கலாசாரம். 200 வயதை அடையும் மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் சந்தா சேர்க்காத தொழிற்சங்கமாக மலையக பாட்டாளிகள் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் அரங்கத்தின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான புறப்பாடு’ எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு ஹட்டனில் நேற்று (30/12) நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே திலகராஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை மலையகத்திற்கு 200 வயதாகிறது. அதன் அரசியலுக்கு 100 வயதாகிறது. அந்த 100 வருட அரசியலுக்கு அடிநாதமாக தொழிற்சங்கங் கட்டமைப்பே இருந்துவந்துள்ளது. கடந்த நூறு ஆண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த உழைப்பின் ஒரு பகுதியை மாதாந்தம் சந்தாவாகச் செலுத்தியே மலையக அரசியலை நூற்றாண்டு காலமாக நகர்த்தி வந்துள்ளனர். மலையகத்தின் மூன்றாவது நூற்றாண்டிலாது உழைக்கும் தொழிலாளர்களின் சந்த்யாவில் தங்கி இருக்காது அன்வரூம் பங்கேற்று இயங்கும் அரசியலை முன்னெடுக்க மலையகம் தயாராக வேண்டும்.

அத்தகைய ஓர் அரசியல் முன்வைப்புக்கு ஆரம்பமாக மலையக அரசியல் அரங்கம் தமது தொழிற்சங்க பிரிவாக மலையகப் பாட்டாளிகள் அரங்கம் எனும் அமைப்பை உருவாக்கவும் தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா வசூலிக்காமல் அதனை முன்னெடுபதற்கும் தீர்மானித்துள்ளது.

2023 முதல் செயற்படவுள்ள இந்தத் தொழிற்சங்கத்தின் உத்தியோகத்தர் சபை விபரம் விரைவில் அறிவிக்கப்படும். சலுகைகளையும் நலன்புரி விடையங்களையும் காட்டி தொழிலாளர்களின் அடிப்படை உரிமை விடயங்களை விட்டுக்கொடுத்துள்ள நிலையில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் அதனை வென்றெடுக்கவுமாக புதிய தொழிற்சங்க கலாசாரத்தை மலையகப் பாட்டாளிகள் அரங்கம் திகழும் எனவும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles