மஹியங்கனை, அரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் மஹியங்கனை, ஒருபெந்திவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவன் என்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி அதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவி ஆவார்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அயலவர் எனவும், அவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கனை பொலிஸாரால் 14 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.