பொகவந்தலாவை, கொட்டியாகல பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டியாகல காட்டுப்பகுதியில் தேயிலை மலையை அண்டிய பகுதியில் கம்பிக்கூடு வைத்து குறித்த சிறுத்தை வேட்டையாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










