துருக்கி, சிரிய பூகம்பம்: 248 மணி நேரத்தின் பின் 17 வயதான யுவதி மீட்பு

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற பயங்கர பூகம்பம் நிகழ்ந்து 248 மணி நேரத்தின் பின்னர் இடிந்த கட்டடம் ஒன்றில் இருந்து 17 வயது இளம் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்படுவோர் பற்றிய நம்பிக்கை இழந்து வரும் நிலையில் தெற்குத் துருக்கியில் இந்த யுவதி காப்பாற்றப்பட்டுள்ளார். 17 வயதான அலைனா ஒல்மாஸ் என்ற அந்த யுவதி கரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள துல்கத்ரொக்லு மாவட்டத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருந்துள்ளார்.

சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி மக்கள் உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவு பூகம்பம் மற்றும் 12 மணி நேரத்தின் பின்னர் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான இரண்டாவது சக்திவாய்ந்த அதிர்வினால் துருக்கியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,187 ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான சிரியாவில் இந்த பூகம்பத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,800க்கு மேல் அதிகரித்துள்ளது.

இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 42,000ஐ நெருங்கியுள்ளது.

பூகம்பத்தில் உயிர்தப்பியவர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடபெற்றுவரும் நிலையில் முன்னதாக 228 மணி நேரத்தின் பின்னர் இடிபாடுகளில் இருந்து 13 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான்.

துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இடிந்த கட்டடம் ஒன்றில் இருந்தே முஸ்தபா என்ற அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles