நாட்டில் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று அறிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலையாக 340 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலையாக 375 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 405 ரூபாவிலிருந்து 325 ரூபாவாக 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபா வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது. புதிய விலையாக 295 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Petrol reduced by Rs 60 : New Price Rs 340
Diesel reduced by Rs 80 : New Price Rs 325
Petrol 95 reduced by Rs 135 : New Price Rs 375
Super Diesel reduced by Rs 45 : New Price Rs 465
Kerosine reduced by Rs 10 : New Price Rs 295










