IMF திட்டத்தின் கீழ், புதிய பொது நிதி முகாமைத்துவம் (PFM) சட்டத்தை இயற்றுதல், பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது மற்றும் ஊழல் அபாயங்களைக் குறைக்கும் அதேவேளையில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்து, அடிப்படை நிதி கையிருப்பை மீண்டும் அதிகரித்தல் ஆகியவை அடங்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக் குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்










