ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரிட்டன் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, ஆளுநர்களின் தரப்புகளும் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகின.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், ஆளுநர் பதவிகளைக் கோரியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பின்னர், அவற்றின் நிர்வாகம் ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்பட்டது.