வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு என்ற செய்திகளில் உண்மை இல்லை

வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஹொரண, மீகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தைஇ பம்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரையும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதுடன், ஹொரண, மீகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தாக செய்தியொன்று பரவி வருகிறது.

இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

Related Articles

Latest Articles