இணைந்து பணியாற்ற புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

” இலங்கையர்கள் பிளவுபட்டு நிற்பதால்தான் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுகின்றது. எனவே, இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல டயஸ்போராக்கள் முன்வர வேண்டும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

நீதி அமைச்சர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

” ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறும் தருவாயில், எமது நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது நாட்டுக்கு எதிராக பல சக்திகள் செயற்படுகின்றன. குறிப்பாக போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை டயஸ்போராக்களால் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.” எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்புகளும் முட்டிமோதிக்கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க முடியாது, அவ்வாறு முற்பட்டால் அது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவேதான் டயஸ்போரா தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பிரச்சினைகளை உள்நாட்டில் தீர்த்துக்கொண்டு, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, முன்னோக்கி செல்வோம் என அழைப்பு விடுத்துள்ளோம்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

” இலங்கையில் இன ஐக்கியம், நல்லிணக்கத்துக்காக பல வேலைத்திட்டங்களை அரசு முன்வைத்துள்ளது. காணாமல்போனார் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, இழப்பீட்டு பணியகம் செயற்படுகின்றது, நல்லிணக்க செயலணி உருவாக்கப்படும், இதற்கான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles