மக்களே அவதானம்! பிசிஆர் பரிசோதனையின்போது மாத்திரை எதுவும் வழங்கப்படாது!!

கொவிட் வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது  , மாத்திரைகளையோ அல்லது வேறு எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று வைத்தியர்களும், சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான  அஜித் ரோஹண தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் நேற்று இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்தார். பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதாக கூறி மஹவ கெத்தபஹூவ என்ற இடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமையில் இவ்வாறான மோசடிகளில் சிலர் ஈடுப்படுகின்றனர். இந்த மோசடிக்காரர்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர்கள் வந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாத்திரைகளையோ  அல்லது வேறு எந்த மருந்துகளையோ தரமாட்டார்கள். இதனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் மூவர் அந்த வீட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிசோதனைக்காக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். அதனை உட்கொண்ட பின்னர் அவர்கள் நித்திரையாகி உள்ளனர். காலையில் பார்த்த போதே தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கணடறிந்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். மஹவ பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles