கடும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாளை கூடுகிறது பாராளுமன்றம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் நாளை (03) இரண்டு மணி நேர கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார். வேறு நடவடிக்கைகள் இடம்பெறாது. சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே நடவடிக்கைகள் இடம்பெறும்.

முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரையே சபை அமர்வு இடம்பெறும்.

இதேவேளை பாராளுமன்ற வரலாற்றில் அமர்வுகளின் போது முதல்முறையாக நாளைய தினம் செய்தி சேகரிப்புக்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles