தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை பொகவந்தலாவையில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை மலையகத்தில் நடத்த வேண்டும் என ஏற்கனவே அமைச்சரவையிலும் கோரிக்கை விடுத்திருந்த ஜீவன் தொண்டமான், அதற்கான இடமாக பொகவந்தலாவையை பரிந்துரைத்துள்ளார்.










