போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த கைதிகள் களமிறக்கப்பட்டனரா?
போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு , அரச அனுசரணையுடன் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார்.
" வட்டரெக்க சிறைச்சாலை வேலை முகாமில் உள்ள கைதிகள், நாளாந்தம், அதிகாரிகளின்...
விசாரணை சிஐடியிடம் ஒப்படைப்பு!
'கோட்டாகோகம’ போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று(10), 32ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி...
கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சபாநாயகர் இன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை...
‘நாட்டை சீரழித்தவர்களை தப்பவிடமாட்டோம்’
நாட்டை முழுமையாக சீரழித்தபின் பொறுப்பை எம்மிடம் கையளித்து விட்டு இலகுவாக தப்பித்து விடலாம் என்று எவரும் எண்ண கூடாது. இவ்வாறான சந்தர்ப்பவாத, சம்பிரதாய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து , அரசியல் மறுசீரமைப்பிற்கு செல்ல...
மஹிந்த பொறுப்புகூறவேண்டும் – ஓமல்பே சோபித தேரர்
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
மக்களுக்காக வீதிக்குவர அஞ்சமாட்டேன் – சஜித்
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் தாம் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள...
ஞான அக்காவின் வீடும் கொளுத்தப்பட்டது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட மந்திரீகரான 'ஞான அக்கா'வினா அநுராதபுரத்திலுள்ள வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு சொந்தமான ஹோட்டலும் கொளுத்தப்பட்டுள்ளது.
மோதல்களில் எட்டு பேர் பலி!
நாடளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை – மோதல் சம்பவங்களின்போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் உட்பட 400 இற்கும் மேற்பட்டோர்...
பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோருக்கு அழைப்பு விடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு
பொலிஸ்மாஅதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டவாட்சியை உறுதிப்படுத்த முடியாமற்போனமை தொடர்பில் அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை...
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு கோரிக்கை!
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் புதிய அரசுஅமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம்...












