கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 565,979 ஆக அதிகரித்துள்ளது.
‘கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறியாதே’ – பொன்சேகாவுக்கு பதிலடி கொடுத்த வீரசேகர!
" கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய முற்பட வேண்டாம்." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத்...
ரயில் சேவைகள் வழமைக்கு…
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் இன்று...
மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரின் தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 412 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 412 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (03) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு!
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி...
‘நான்தான் அடுத்த பாதுகாப்பு அமைச்சர் – மாவீரர் நினைவேந்தலை தடுப்பேன்’ – பொன்சேகா
"ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சர். கட்சி தலைவர் இதனை உறுதிப்படுத்திவிட்டார். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நிச்சயம் தடை விதிப்பேன். அதற்கான அனுமதியை வழங்கமாட்மேன்." - என்று ஐக்கிய மக்கள்...
இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்!
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான 'ஒமிக்ரோன்' தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்றியுள்ளது.
விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது...
எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த காரணம்
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்தம், உரிய அளவில் இல்லாதமை காரணமாகவே, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவை கண்டறியும்...
’06 ஆம் திகதி அம்பலம்’- சஜித்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!
" முடிந்தால் 06 ஆம் திகதி சபைக்கு வாருங்கள். எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்பேன்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்...









