சபாநாயகரை அவசரமாக சந்தித்தார் சீனத் தூதுவர்
சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (08) சந்தித்தார்.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும்...
நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள்!
"அரசின் வெளிநாட்டு கொள்கை நிலையில்லாது தளம்பலாக உள்ளமை, ராஜதந்திர தொடர்புகளை பேணுவதில் உள்ள குறைபாடு என்பன இன்று நாட்டின் பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 365 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,467 ஆக அதிகரித்துள்ளது.
உள்ளூர் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்ய போலந்து எதிர்பார்ப்பு
இலங்கையின் பால் உற்பத்தித் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக போலந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடனான நேற்றைய சந்திப்பின்போது இலங்கைக்கான போலந்து தூதுவர்...
ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி! ரொசல்லயில் சோகம்!!
ஹட்டன் - வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர் என பொலிஸார்...
‘கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்’ – செல்வம் எம்.பி. கவலை
" புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை. இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
யுகதனவி ஒப்பந்தத்தை உடன் சபையில் முன்வைக்குமாறு ரணில், அநுர வலியுறுத்து
" கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார...
பயன்படுத்தப்படாத லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற பணிப்பு
வீடுகள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்திற்கு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பணிப்புரை விடுத்துள்ளது.
டிசம்பர் 04 ஆம் திகதிக்கு...
வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இன்று (8) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது’ – மனோ
"எமது காணி, எமது உயிராகும்" தலைப்பில் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரை...












