அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 22ஆவது சிரார்த்த தினம் இன்று
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் இந்திய வம்சாவளி மக்களின் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 22 வது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது பழைய பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு...
ஸ்கொட்லாந்து நோக்கி பயணமானார் ஜனாதிபதி
ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து - க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள “COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (30) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.
காலநிலை...
‘யுகதனவி’யால் மொட்டு கூட்டணிக்குள் மோதல்
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான 'மொட்டு' அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
'யுகதனவி' திட்டத்தின் ஊடாக...
அரசுக்கு விமல் விடுத்துள்ள எச்சரிக்கை
" தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அதனை தைரியமாக சுட்டிக்காட்டுவோம். அமைச்சு பதவிக்காக மனசாட்சியை அடகுவைக்கமுடியாது. " - என்று அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையகத்தின் 40...
ஆட்சியைக் கவிழ்க்கவா ‘மக்கள் சபை’க்கூட்டம்? தயாசிறி விளக்கம்
" நாம் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக நாட்டை பாதுகாக்கவே போராடுகின்றோம். எதிர்காலத்திலும் போராடுவோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில்...
‘யுகதனவி ஒப்பந்தத்தை தோற்கடிக்க அமைச்சு பதவியை துறக்கவும் தயார்’
" கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது." என்று தூய ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில்...
புதிய அரசமைப்பு, மீனவர் பிரச்சினை: சம்பந்தனுடன் இந்தியத் தூதர் பேச்சு!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இருவரும் சந்தித்து உரையாடினர்.
இந்தச்...
காலை வாருகிறது சுதந்திரக்கட்சி – கழுத்தை பிடிக்கிறது மொட்டு கட்சி
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசுக்குள் இருந்துகொண்டு காலைவாரும் செயலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசால் முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு மக்கள்...
கொரோனா தொற்று உறுதியான 415 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 415 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,275 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
போகம்பரை சிறைச்சாலையின் மருத்துவர் கைது
பெண் கைதிகளுக்கு கைதொலைபேசிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வழங்கி பணம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் கண்டி, போகம்பரை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




