தன்சலுக்கு அருகாமையில் கத்திக்குத்து – 23 வயது இளைஞன் உயிரிழப்பு
எஹலியகொட, பன்னில பிரதேசத்தில் நேற்று (3) மாலை தன்சல் ஒன்றிற்கு அருகில் 23 வயதுடைய இளைஞரொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூப் தன்சலுக்கு அருகாமையில் குறித்தசம்பவம்...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும்
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் 524, 486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த மே மாதம் மாத்திரம் 83, 309 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அது மட்டும்...
லிட்ரோ விலை குறைப்பு – புதிய விலை விபரங்கள்
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய,...
நாடுமுழுவதும் 17 ஆயிரம் தன்சல்கள்
நாட்டின் நிலையைக் கருத்திற்கொள்ளும் போது, 3 வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தால் இவ்வருடம் பொசன் தினத்தைக் கொண்டாட முடிந்துள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடுமுழுவதும் 12 மணிநேர மின்தடை காணப்பட்டதால் தன்சல்...
செங்கடகல மெனிகே தடம் புரண்டது
ரயில் தடம் புரண்டதால் மலைநாட்டு ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே புகையிரதம் கடிகமுவ மற்றும் ரம்புக்கன புகையிரத நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக...
இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்கவும் – புசல்லாவையில் நாளை போராட்டம்
புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி நாளை (05.06.2023) மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.
புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் காலை 7 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகவுள்ளது எனவும், தோட்ட மக்கள், ஆசிரியர்கள்,...
கடன் அட்டையை திருடி நகை வாங்கிய இளம் பெண் கைது
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் கடன் அட்டையை திருடி அதன்மூலம் தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில்...
யாழில் ஹெரோயின் பயன்படுத்திய 10 வயது சிறுவன் கைது!
உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
யாழ்., வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் பாடசாலையைவிட்டு இடைவிலகிய நிலையில், உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளான்.
விசாரணைகளின்போது வேறு பல...
அச்சம் கொள்ளத் தேவையில்லை – எரிபொருள் கையிருப்பு உள்ளது
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எந்த வகையிலும்...






