900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த சுற்றுலா கப்பல்
அதிசொகுசு பயணிகள் கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது.
Viking Mars என்ற கப்பலே இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
900 சுற்றுலா பயணிகளுடன் இந்த கப்பல் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளது
பாடசாலை உபகரணங்களின் விலை தொடர்பான அறிவிப்பு!
செஸ் வரி (CESS) திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே...
கொழும்பு – பௌத்தலோக மாவத்தையில் போக்குவரத்து தடை
கொழும்பு – பௌத்தலோக மாவத்தையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சம்மேளனம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு...
சிறுவர்களின் போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயார் – சந்திரிகா
சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேவையாக சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்து அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...
கறுப்புச் சந்தையில் கூட மண்ணெண்ணெய் இல்லை- லக்ஸ்மன் கிரியெல்ல
கண்டி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணெய் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய கிரியெல்ல, பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு வழியில்லாததுடன், கண்டியில் கறுப்புச் சந்தையில் கூட...
இரசாயனப் பதார்த்தங்கள் பற்றாக்குறை- இரத்த பரிசோதனைகள் நிறுத்தம்
இரசாயனப் பதார்த்தங்களின் பற்றாக்குறையால் இரத்தப்பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகள் பல தெரிவித்துள்ளன.
லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இவ்வாறு இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், தனியார் ஆய்வகங்களில்...
மேக்ரோ பொருளாதார சவால்களுக்கு மத்தியில் முதல் அரையாண்டில் வலுவான செயல்திறனை வழங்குகிறது சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
சவால் நிறைந்த பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் சிறந்த நிதிச் செயல்திறனின் மற்றொரு காலாண்டைப் பதிவுசெய்து, பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN) 30 செப்டம்பர் 2022 (1HFY23) உடன் முடிவடைந்த...
கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழப்பு
கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் பயணித்த வாகனம் சுவரில் மோதியதில் மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கமுவ, இஹலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
2 வயது பெண் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள் -அதிர்ச்சி தகவல்
உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் ட்விட்டர் நிறுவனம்
ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டிடங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிறுவனத்தின்...












