தேயிலை தொழிற்சாலையில் தீ
நுவரெலியா - இராகலை பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க பொது மக்கள் முயற்சித்து வருகின்றனர்.
தீயணைப்பு சேவைக்கு அறிவித்தும் ஒரு மணித்தியாலங்களை...
ஆயுதங்களால் மக்களின் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது- ஆனந்தகுமார்
நாடு தினம் தினம் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு பொருளாதார சுமைகள் அதிகரித்துள்ளன. இதனை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியும் அமைச்சரவையும் உடனடியாக இராஜனாமா செய்வதை தவிர வேறு...
‘ஜனாதிபதி பதவி விலகல்’ – சபையில் மூண்டது சர்ச்சை
" ஜனாதிபதி பதவி விலக தயார் என நான் குறிப்பிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்துவிட்டார்."
இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 113...
ரம்புக்கனை சம்பவம் – ரிஷாட் விடுத்துள்ள அறிவிப்பு
மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் நேற்று...
ரம்புக்கனை சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை கோரும் ரணில்
" ரம்புக்கனை சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். அது மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். எனவே. இங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான - சுயாதீன விசாரணை அவசியம்."
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி தலைவர்...
‘ரம்புக்கனை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலையில் பாரிய போராட்டம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட...
விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்- காஞ்சன விஜேசேகர
எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மற்றும் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவியை கோருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது வரும்?
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணையில் நேற்றைய தினமும் சில எம்.பிக்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த நடவடிக்கை தொடரவுள்ளது.
" தக்க தருணம் பார்த்து, ஆளுந்தரப்பின் ஆதரவும் எமக்கு கிடைக்கும்....
‘கோ ஹோம் கோட்டா’ – சாமிமலையிலும் போராட்டம்
மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமிமலை நகரில் இருந்து கவரவில்லை சந்தி வரை பேரனியாக வந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
எரிபொருள்...
கோ ஹோம் மஹிந்த – சபையில் முழங்கினார் விமல்
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான இந்த அரசு பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க இடமளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்நாட்டில் ஏற்படப்போகும் நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டும்."
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...













