இலங்கையில் வேகமெடுக்கும் ‘ஒமிக்ரோன்’!
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
மருந்துவகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா, சீனாவில் இருந்து பெற நடவடிக்கை!
நாட்டில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர்...
வாசுவுக்கு அழைப்பு விடுத்தார் பஸில்!
“ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுங்கள். தொகுதி அமைப்பாளர் பதவியை தருகின்றேன்.”
இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் பஸில் ராஜபக்ச.
ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தின்போது,
“இரத்தினபுரி மாவட்டத்தில், எனது...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் எமக்கான தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டிக்கோரி இன்று காலை 08.00 மணியில் இருந்து யாழ் பல்கலைக்கழக வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு...
பங்காளிகளின் அவசர சந்திப்பு
அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பொன்று அமைச்சர் விமல் வீரவங்சவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான...
ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா
பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவாரத்துக்குப்...
‘உக்ரைன்மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம்’
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுப்பதற்கு இன்னும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைக்கு தீர்க்கமான முறையில் பதலளிக்க...
மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு பலி
நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,899 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை...
சாதாரண தரப்பரீட்சார்த்திகளுக்கு ஓர் அறிவித்தல்
2021 (2022) ஆண்டின் கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் (17) நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
முன்னராக பெப்ரவரி மாதம் 3ஆம்...
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொவிட்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








