லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாகும்.
இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொலரொன்றின் பெறுமதிக்கமைய மருந்துகளின் விலைகளில் மாற்றம்
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மருந்துகளின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும்...
பயப்பட வேண்டாம் நான் இராஜினாமா செய்யப்போவதில்லை – பிரதமர்
அத்தியாவசிய தேவைகளுக்கான வரிசைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதாரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த அரசாங்கம் நாட்டை தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நிலையில்,...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கவும்- மனித உரிமைகள் ஆணைக்குழு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது.
கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது...
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம்- தேர்தல்கள் ஆணைக்குழு
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனூடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை...
எரிவாயு விலையை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை-லிட்ரோ
எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண விலையை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு நெருக்கடி தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, லிட்ரோ நிறுவனத்தின்...
சாய்ந்தமருது குண்டு வெடிப்பு சம்பவம் – உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க அனுமதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த...
இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு
உலகிலேயே அதிக பணவீக்கமுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது என்று அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கி தெரிவித்துள்ளார்.
அவர் இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில்...
‘நான் அவன் இல்லை’ – பிரதமர் பதவி குறித்து மைத்திரி கருத்து
" இடைக்கால அரசின் புதிய பிரதமர் நான் அல்லன்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
" அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை...
மீண்டும் மீண்டும் இலங்கைக்கு கடன் கொடுக்கும் சீனா
கடனை மறுசீரமைப்பதற்கு சீனா விரும்பம் தெரிவிக்கவில்லை எனவும் தற்போதுள்ள கடனை தீர்ப்பதற்கு மீண்டும் மற்றுமொரு கடனை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.









