அரசியல் தீர்வு தொடர்பில் அமெரிக்கத் தூதுவருடன் மனோ எம்.பி. கலந்தாய்வு
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின்...
தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை அரசாங்கம் குத்தகையிலிருந்து விடுவிக்க வேண்டும்
அரசாங்கத்துக்கு சொந்தமான பெருந்தோட்டங்களை பெருந்தோட்ட கம்பனிகள் நீண்ட கால குத்தகைக்கு பெற்றுள்ளன. இவர்கள் குத்தகை செலுத்துகின்ற மொத்த காணிகளில் தோட்ட குடியிருப்பு பிரதேசமும் அடங்கியுள்ளது.
இதனால் பெருந்தோட்ட கம்பனிகள் தோட்ட குடியிருப்பாளர்கள் மீதும் ஆதிக்கம்...
தோட்ட முகாமையாளர் விடுதி தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இதன் போது...
தை பிறந்ததும் மமமு தலைமைப் பதவியில் மாற்றம்
(க.கிஷாந்தன்)
தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என்று மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மலையக...
சிஸ்டம் சேன்ஜ் என்பதை மலையகத்தில் இருந்து ஆரம்பியுங்கள்!
நாட்டு மக்கள் வழங்கியுள்ள ஆணையைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அநுரகுமார திஸநாயாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில்...
பூண்டுலோயாவில் தந்தையின் தாக்குதலில் மகன் பலி!
தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார்...
பிரவுன்லோ தோட்டத்தில் விபத்து: ஐவர் காயம்!
நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா - பிரவுன்லோ தோட்டப் பகுதியில் கெப் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் கொடகவெல...
அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கோரினார் புடின்!
அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டது.
பின்னர் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்...
குளவிக்கொட்டு: எட்டு தொழிலாளர்கள் பாதிப்பு!
அக்கரப்பத்தனை, பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியமே இச்சம்பவம்...
நுவரெலியாவில் மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
நுவரெலியா ஹவஎலிய பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் (26) வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர்...













