‘சஜித் -டலஸ் சங்கமம்’ – மலர்கிறது ‘மெகா’ கூட்டணி!
" எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.
" டலஸ் அணியினர் தனித்துவிடப்படவில்லை, அவர்களுடன் எமக்கு புரிந்துணர்வு...
இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது சுவிட்சர்லாந்து!
அவசரகால சட்டம் நீடிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், இலங்கைமீது விதித்திருந்த கடும் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு...
முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் – டலஸ் சூளுரை
" தனியானதொரு அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது விடயத்தில் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டோம்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தனியாக சென்றுள்ள டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.
" அதிகாரத்தில் இருப்பவர்கள்...
குடும்பப் பெண் கொலை! தலவாக்கலைவாசி கைது!!
குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை – சாப்புகடே பகுதியில் குறித்த பெண் காணாமல்போனமை தொடர்பில் அவரது மகள் வெலிமடைப் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், குறித்த...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...
30 இராஜாங்க அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பு!
அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க...
நாடாளுமன்றம் செல்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி பி.ப 2.00 மணி...
உலகில் உள்ள பலம்பொருந்திய தலைவர்கள் பட்டியலில் ரணில்
" உலகில் உள்ள பலம்பொருந்திய அரசியல் தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். இப்படியான ஒரு தலைவரே எமது நாட்டை ஆள்கின்றார். இது சிலருக்கு சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம். எனவே, எமது ஜனாதிபதியை...
‘பல்தேசியக் கம்பனிகளுக்கு கடல் வளத்தை தாரைவார்க்கவா மண்ணெண்ணெய் விலை உயர்வு”
மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி, சிறு மீனவர்களை வேலையிழக்கச் செய்து, கடல் வளத்தை பெரும் செல்வந்தர்களுக்கு கிடைக்கச் செய்யும் திட்டம் உள்ளதா என்ற சந்தேகத்தை, தென்னிலங்கையின் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்.
கடந்த 21ஆம்...
தோட்ட நிர்வாகம் கெடுபிடி – தொழிலாளர்கள் கொதிப்பு! சமரச முயற்சியில் ஜீவன்
கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சு மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்தி...











