ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட கொள்கை வகுப்பாளர்கள் மக்களின் இறையாண்மைக்கு செவிசாய்க்க வேண்டும்
நீண்ட கால பணி பகிஷ்கரிப்பு செய்வதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும் என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் அறிவுறுத்தியுள்ளது
உலகை வியப்பில் ஆழ்த்திய படைப்புக்களை நிர்மாணித்த இலங்கைக்கு, அந்த பெருமைமிகு...
வீரக்கெட்டியவில் சூடு -இருவர் பலி! ஐவர் காயம்!!
வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ஊரடங்கு தொடர்பிலான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை...
ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரை!
அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டுள்ளன. ரமேஷ்...
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அறுவரில் ஒருவர் பலி
நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அறுவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்...
போராட்டத்துக்கு மத்தியில ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள, உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அமரகீர்த்தி அதுகோரள எம்.பியும், அவரின் பாதுகாவலர்களும் நகரில் ஓடுவதுபோல காணொளி வெளியாகியுள்ளது .
எனினும்,...
அலி சப்ரி இராஜினாமா
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (09) பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் மூன்று அமைச்சர்கள்...
நிட்டம்புவையில் துப்பாக்கி சூடு
நிட்டம்புவையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தரில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Breaking news: பிரதமர் இராஜினாமா!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.
‘போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் ‘ – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு மக்கள் அரசிடம், கோரிக்கை விடுத்துள்ள...









