மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொகவந்தலாவையில் கைது!
பொகவந்தலாவை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
38 மற்றும் 43 வயதான பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்...
எரிபொருள் தட்டுப்பாட்டால் தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பில்லை
தொடருந்து சேவைக்கான எரிபொருளில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக...
கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் தரையிறக்கம்
உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள டீசலில் 8,000 மெட்ரிக் டன் இலங்கை...
எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் தடை
வெள்ளவாயப் பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக, வெள்ளவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ், ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
01-03-2022ல்...
அமெரிக்கா நினைத்திருந்தால் போரை தடுத்திருக்கலாம்
மார்ச் 5 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
நாளையும் நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு
இன்றைய தினத்தை போன்றே நாளையும் (3) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (3) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.
ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு
ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த கப்பல்கள் ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமானது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை...
‘மொட்டு’க்கு பதிலடி கொடுக்கிறது ‘தொலைபேசி’ – 29 இல் அதிரடி!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய அரச எதிர்ப்பு போராட்டமொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அண்மையில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டம்...
ரஷ்யா கோர தாக்குதல் – பற்றி எரிகிறது உக்ரைன்!
உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள பொலிஸ் அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம்...












