கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,432 ஆக அதிகரித்துள்ளது.
சதொசவில் 75 ரூபாவுக்கு தேங்காய் பெறலாம் -பந்துல
லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பினூடாக இவ்வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிர்ணய விலையில் தேங்காய்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
மறு அறிவித்தல் வரை திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது
மறு அறிவித்தல் வரை திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
இதற்கமைய, மின்...
சுகாதார வழிகாட்டுதல்கள் பெப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது-ஹேமந்த ஹேரத்
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயை தடுப்பது தொடர்பான சுற்றறிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’...
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற விசேட...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்
2021ம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இந்த பணிகள் இடம்பெறும்...
14 ரயில் சேவைகள் ரத்து – ரயில் திணைக்களம்
சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பிரதான...
மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டால் ஆபத்து மிகக் குறைவு
கொவிட் தடுப்பிற்கான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒருவர் தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால் கூட அவருக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப வைத்திய...
கொவிட் தொற்றால் 11 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!
புத்தளம் - நாத்தாண்டியவில் உள்ள தேசிய பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குறித்த பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த மாணவியொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு நாட்கள் மாரவில வைத்தியசாலையின்...












