கப்ரால் மத்திய வங்கி ஆளுநராவது உறுதி! எம்.பி. பதவி யாருக்கு?
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பது உறுதியாகியுள்ளதென ஆளுங்கட்சி எம்.பியான ஜகத் குமார தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தும் வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது...
2024 இல் ஐ.தே.க. ஆட்சி சாத்தியமா? ஆம் என்கிறார் மூத்த உறுப்பினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. கட்சி மாநாடு, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது அலசி ஆராயப்பட்டுள்ளது.
அப்போது,...
அரசிலிருந்து வெளியேறி மாற்று கூட்டணி அமைக்குமா சு.க.?
"அரசிலிருந்து வெளியேறி, மாற்று அரசியல் கூட்டணியை அமைக்கும் தீர்மானத்தை கட்சியின் மத்தியசெயற்குழு எடுக்கவில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் மாற்று...
மலையக மக்களின் இருப்புக்கு ஆபத்து – ஓரணியில் திரளுமாறு வேலுகுமார் அழைப்பு
" மலையக மக்களின் இருப்பை சிதைத்து, வாழ்வாதாரத்தை அழித்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்துக்கொள்வதற்கான நகர்வையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
இம்முயற்சியை முறியடித்து, எம் மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொண்டு - முன்னோக்கி பயணிப்பதற்கு...
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் மடுல்சீமையில் கைது!
மடுல்சீமை குடுதோவ பகுதியில் கள்ளச்சாராயம் (கசிப்பு) உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,குறித்த பகுதிக்கு விரைந்த மடுல்சீமை பொலிஸார், கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபட்ட 22, 25...
‘பிரதமர் மஹிந்த வத்திக்கானுக்கு செல்லமாட்டார்’
திருத்தந்தை பாப்பரசரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அத்துடன், இது தொடர்பில் பிரதமருக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை - என்று வெளிவிவகார அமைச்சு இன்று...
அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை யாழ். விஜயம்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, நாளை (09) யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாமல் ராஜபக்ச அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில்...
21/4 தாக்குதல் – உண்மை கண்டறியப்பட வேண்டும்! பேராயர் மீண்டும் வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதுல் சம்பவம் தொடர்பான விசாரணையை திசைதிருப்பும் வகையிலான அரசாங்கத்தின் நகர்வை அனுமதிக்க முடியாதென பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்தார்.
உண்மையைக் கண்டறிந்து, உள்நாட்டிலேயே நீதியை வழங்குவதற்கான அதிகாரம் அரசாங்கத்திடம்...
‘வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன ஐ.சி.யூவில்’
அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவரும், களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன்ட் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து...
வவுனியாவில் விபத்து – இருவர் பலி!
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த...



