நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படாது! இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) முற்பகல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம், பாதுகாப்பு காரணங்களால் இரத்து செய்யப்பட்டிருந்தாலும், zoom தொழில்நுட்பம் ஊடாக...
பிரபாகரனை போற்றி, ராஜபக்சவை தூற்றிய வைரமுத்து
" நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே..."
இவ்வாறு கவி நடையிலேயே கேள்வி தொடுத்து, மஹிந்த ராஜபக்சவை விமர்சித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு?
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டபடி மே...
மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு சிஐடி அழைப்பு
கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கா, முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் இன்று(11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம்...
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் ‘பொங்பொங்’ மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி தற்போது செனட்டராக இருக்கும் மார்கோஸ் 55.8 வீத வாக்குகளை...
காலிமுகத்திடலில் மீளுருவாகிய எழுச்சிப் போராட்ட கோஷங்கள்
காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (11) போராட்டம் தொடர்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில்...
வன்முறை வேண்டாம் – அமைதி காப்போம்! அறவழியில் போராடுவோம்!!
" இலங்கையில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையை இனக்கலவரமாக மாற்றுவதற்கு சில விஷமிகள் முற்படுகின்றனர். எனவே, வன்முறையில் ஈடுபடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்தையும் கையில் எடுக்க முற்படக்கூடாது. பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு...
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
அடை மழையால் நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு...
கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து! நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருப்பது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.
அத்துடன், சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அங்கொட சந்தியில் துப்பாக்கிச் சூடு
அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு தீ வைக்க முயற்சித்த கூட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.









