‘நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு’
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்துக்கொள்ள முடியாமல் மரக்கறி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நுவரெலியா...
‘பட்டினி சாவுக்கு அஞ்சி – இலங்கையில் இருந்து வெளியேறும் மக்கள்’
" போரால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டினிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடி க்கு வந்துள்ளோம்."
இவ்வாறு வவுனியாவில்...
‘அசிங்கமான அமெரிக்கர்’ – பஸிலை மீண்டும் போட்டுத்தாக்கிய விமல்!
" எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் செயற்படுகின்றார்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற அரசியல்...
எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும்- நாமல்
மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விநியோக நிறுவனங்களும்...
நாளையதினம் 5 மணி நேர மின்வெட்டு
நாளையும் (23) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3...
கொவிட் தொற்றால் மேலும் 4 மரணம்!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றையதினம் (21) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,440ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா.
தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகிரை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விவாகரத்து பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டதாகவும், ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியானது.
மேலும், ஐஸ்வர்யாவின்...
‘புதிய பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றம்’
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று (22.03.2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக...
இலங்கையின் வான் பரப்பும் விற்பனையா? சஜித் அணி கேள்வி
பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டுள்ளது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
‘புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில்லறைத்தமான திருத்தங்கள்’ – எதிரணி சாடல்
" புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை. அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது." - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்பு...











