கொவிட் தொற்றால் 27 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 27 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி
ஹொரணை - கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்...
ஏப்ரல் மாதம் வரை நீர் மின்சாரத்தை பாதுகாக்க வேண்டும் – மின்சார பொறியியலாளர் சங்கம்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில், நீர் மின்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கிடைக்காவிட்டால், உரிய முறையில் இயங்க முடியாமல்போகும்.
ஏப்ரல் மாதமளவில் மழை...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 287 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 287 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,329 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் வேகமெடுக்கும் ‘ஒமிக்ரோன்’!
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
மருந்துவகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா, சீனாவில் இருந்து பெற நடவடிக்கை!
நாட்டில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர்...
வாசுவுக்கு அழைப்பு விடுத்தார் பஸில்!
“ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுங்கள். தொகுதி அமைப்பாளர் பதவியை தருகின்றேன்.”
இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் பஸில் ராஜபக்ச.
ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தின்போது,
“இரத்தினபுரி மாவட்டத்தில், எனது...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் எமக்கான தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டிக்கோரி இன்று காலை 08.00 மணியில் இருந்து யாழ் பல்கலைக்கழக வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு...
பங்காளிகளின் அவசர சந்திப்பு
அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பொன்று அமைச்சர் விமல் வீரவங்சவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான...








