இலங்கையில் பஸ்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம்!
பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் பொருத்தப்படும். முதற்கட்டமாக இரு மாதங்களுக்குள் 40 பஸ்களில் இதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் - என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி: ஆராயுமாறு வலியுறுத்து
அரசியல் கட்சிகளுக்கு நிதி வரும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வழிவகுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
கொள்ளையர்கள் தப்பவே முடியாது!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் கள்வர்கள் தப்பவே முடியாது எனவும், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ஊழல்வாதிகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.
அரியாலை,...
கட்சி முடிவை மீறினால் பதவி பறிப்பு
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியின்போது கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற...
அவிசாவளையில் அடாவடி: தோட்ட நிர்வாகம் கூறுவது என்ன?
அவிசாவளை பகுதியில் தோட்ட இளைஞன் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தோட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள...
வடக்கை நாம் இழந்துவிட்டோமா?
“பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...
யாழ்.மாவட்டத்தைக் கட்டியெழுப்ப ‘மீண்டெழும் அலைகள்’ திட்டம் வகுப்பு!
யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
யாழ்....
இந்தியாவை நம்பியிருக்கிறது வடக்கு!
எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிகளை இந்தியாவை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் வடக்கு மக்களின்...
கம்பளையில் 700 அழுகிய முட்டைகள்: ஹோட்டலுக்கு சீல்!
கம்பளையில் புழு வைத்து - அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை வைத்திருந்த உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு கம்பளை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில்...