எரிந்த நிலையில் சடலம் மீட்பு
வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டடுள்ளது.
குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (28) வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்தநிலையில்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான...
தண்டவாள ஆணிகளை அகற்றும் போதைப்பொருள் அடிமைகள்
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள் வாங்குவதற்காக புகையிரத தண்டவாளங்களில் உள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றுவதால் பெரும்பாலான புகையிரதங்கள் தடம் புரள்கின்றன.
இவ்வாறானவர்கள் தொடர்பில் அறியக் கிடைத்தால் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்
ஆசிரியர் பற்றாக்குறையால் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான 2000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று...
ஜனாதிபதியை தலையிடுமாறு அவசர கடிதம்
மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் வைத்தியர்கள் இன்று...
அதிகளவு ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் மரணம்
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த நிலையில், அவருக்கு...
‘அஸ்வெசும’வையும் அரசியலாக்க வேண்டாம் – அநீதியெனில் மேன்முறையீடு செய்யுமாறு ஜீவன் கோரிக்கை
அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு! வேட்டைக்கு சென்ற மூவர் கைது
துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வக்கரை வனப்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் தனது உறவினர்கள் குழுவுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த...
இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஜுலையில் ஆரம்பிக்கிறது Air China
சீனாவின் 'Air China' (எயார் சைனா) விமான நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஜூலை 03ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்க வரை 3...
” வங்கி விடுமுறை குறித்து வீண் அச்சம் வேண்டாம்”
மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கை வைக்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...