தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன் – சம்பந்தன் திட்டவட்டம்!
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. துறக்கவுள்ளாரென...
போதைப் பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது
போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச்சென்ற 12 இளைஞர்கள் ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களுடன் யாத்திரைக்குச் செல்வோரை கைது செய்வதற்காக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் திடீர்...
IMFஐ நாடினால் அரசிலிருந்து வெளியேறுவேன் – அபாய சங்கு ஊதினார் வாசு
" இலங்கை அரசு, சர்வதேச நாணய நிதியத்தை நாடும் பட்சத்தில் மறுநொடியே அரசியிலிருந்து வெளியேறுவேன். சர்வதேச நாணய நிதியத்திடம் கடம்பெறுவதென்பது ஏழு பரம்பரைகளுக்கு பாதகமாகவே அமையும்." - என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...
‘எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்’ – பரிசோதனை அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்
சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின், பரிசோதனை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
நாட்டில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில்...
இன்று தீர்க்கமான அமைச்சரவைக் கூட்டம்!
மிக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கான தீர்வுகள், புதிய ஆண்டின் அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகள் கட்டமைப்பில் ஏற்படவுள்ள...
நுவரெலியா உட்பட 5 மாவட்டங்களில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!
ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (20) 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று (20)...
13 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ் பல்கலை மாணவி சாதனை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First class ) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளாா்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின்...
எரிவாயு விநியோகம் தொடர்பாக லிட்ரோ, லாஃப்ஸ் நிறுவனங்களுக்கும் ஆலோசனை
உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடர்பாக குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அண்மைய உத்தரவுக்கு அமைய மாத்திரம் எரிவாயு...
கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மேலும் 430 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 430 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 579,564 ஆக அதிகரித்துள்ளது.









