கோபா குழுவின் தலைமைப் பதவி திஸ்ஸ விதாரண வசம்!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் இராஜாங்க...
கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் மீண்டும் நியமனம்!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள்...
‘சிறுமிமீது வன்கொடுமை’ – குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை!
பருவமடையாத சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், மேல் நீதிமன்ற நீதிபதியினால் குற்றம் புரிந்த நபருக்கு, 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்ச ரூபா இழப்பீடும்,...
‘நாங்க ரெடி, நீங்க ரெடியா?’ – மஹிந்தவின் சவாலை ஏற்றது சஜித் அணி!
" தேர்தல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த சவாலை நாம் ஏற்கின்றோம். எனவே, உள்ளாட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...
தென்கொரியா பறந்தார் மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி இன்று பயணமானார்.
அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கீ மூன்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைப்பு’
1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த...
நிதி அமைச்சர் பஸில் சிறப்பாக செயற்படுகிறார் – ஜோன்ஸ்டன் புகழாரம்!
நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மிகவும் சிறப்பாக - திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் - என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன்...
‘மடக்கும்புரயில் இளம் குடும்பஸ்தர் கொலை’ – தலைமறைவான சந்தேகநபர் கைது!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர, வடக்கிமலை தோட்டத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையில் பணக் கொடுக்கல், வாங்கலினால் ஏற்பட்ட முறுகலில்...
மொட்டு கட்சி மாநாட்டில் துமிந்தவுக்கு வெட்டா?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியவை வருமாறு,
" ஶ்ரீலங்கா பொதுஜன...
‘கொரோனா’விலிருந்து குணமடைந்து சபை அமர்வில் பங்கேற்றார் சபாநாயகர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முழுமையாக குணமடைந்து, தற்போது தமது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் பங்கேற்றிருந்தார். அவர் தலைமையிலேயே சபை கூடியது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...













