அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட்
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்றுறுதியாகியிருந்தது.
விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சரவை அனுமதி!
2021 - 2022 ஆண்டுகளில் நெல் பெரும்போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்காக தலா 25...
ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம்...
யாழில் வாள்வெட்டு கும்பல் அடாவடி (படங்கள்)
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி...
போலி இரத்தினக் கற்களால் வியாபாரிகள் ஏமாற்றம்
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட போலி இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் இரத்தினக்கல் தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி இரத்தினக்கல் சந்தைகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகப் பிரசித்தி பெற்ற இயற்கை இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் புகழ்...
‘தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்’ – முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து!
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனைக்கு விடப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதனை மனிதாபிமான...
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் கொரோனா!
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் வீட்டிலேயே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, கோகிலா குணவர்தன உள்ளிட்டவர்களுக்கும்...
3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது கட்டாயம்!
மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே பூரணமாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது...
” இந்த காட்டாட்சியை வீழ்த்த சஜித், சம்பிக்க சங்கமிக்க வேண்டும்” – மனோ அறிவுரை
" நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும்." என்று தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ்...
மத்திய வங்கி வெளியிட விசேட வர்த்தமானி அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (24)வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையர் அல்லாதவர்களிடம் விருந்தகங்கள் கட்டணங்களை வசூலிக்கும்போது அமெரிக்க டொலராக பெற வேண்டுமென்பதை கட்டாயப்படுத்தி மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.













