வவுனியாவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா!
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்வில் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டமையால் ஆலயம் மற்றும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை,...
கொரோனா தொற்றாளரிடம் கஞ்சா வாங்க வந்த ஆறு பேர் கைது!
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரிடம் கஞ்சா வாங்குவதற்காக வருகை தந்திருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை, கொட்டிகும்புர பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிந்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்படி...
கொரோனாவால் மேலும் 93 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 93 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 48 ஆண்களும், 45 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 50 நாட்களுக்கு பிறகு...
வாட்ஸ்அப்பில் வரும் போலிகள் : அவதானம்! கொழும்பில் குறிவைக்கப்பட்ட பெண்
வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெகிவளையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட...
இந்த மூன்று பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன?
பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அடுத்த சில தினங்களில் அதிகரிக்கப்படும் என்று நுகர்வோர் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விலைகள் தொடர்பான குழுவின் ஆய்வுக்கு அமைய...
‘ICUக்களில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவு’
" நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது. வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருந்த இடப்பற்றாக்குறையும் தற்போது இல்லை. எனவே, இந்நிலைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் இனிவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை...
தனிமைப்பட்ட வேவல்வத்தை தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்!
பம்பரபொடுவ வேவல்வத்தை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை...
‘இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு’ – ஜனாதிபதியிடம் ஐ.நா.செயலர் உறுதி
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்...
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ – யாழில் 35 பேருக்கு நேர்ந்த கதி
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பிரபல விடுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...
நாளை கூடுகிறது பாராளுமன்றம்
நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை செப்டெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை 21ஆம் திகதி முற்பகல் 10...



