12 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது – வலுக்கிறது ஆதரவு

0
"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 12 ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி...

‘உணவு ஒவ்வாமை’ – 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரம்புக்கனை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் கடும் சர்ச்சை! சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

0
ரம்புக்கனையில் மக்கள் போராட்டம்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் சபையில் இன்று கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பில் சபையில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளையும் முன்வைத்தனர். இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் சபையில் கடும் தர்க்கம்...

ரம்புக்கனை சம்பவம் – தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் கண்டனம்

0
ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

காலி வீதி முற்றாக முடக்கம்

0
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் காலி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது. வீதியின் குறுக்கே 2 கார்கள் மற்றும் பஸ் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தால்...

‘ரம்புக்கனை சம்பவம் அரச பயங்கரவாதம்’ சஜித் கடும் சீற்றம்

0
" ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். அத்துடன், அரச பயங்கரவாதத்தை...

பெருந்தோட்ட மக்களும் போராட்டத்தில் குதிப்பு!

0
பசறை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி தோட்ட மக்கள் , பதுளை - பசறை பிரதான வீதியின் ஒரு பகுதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வீதியில் டயர்களை எரித்தும், பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறு...

‘மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்’

0
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – 19 தமிழ் எம்.பிக்கள் ஆதரவு! அறுவர் எதிர்ப்பு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை (20.04.2022) எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ✍️...

‘ரம்புக்கனை மோதல்’ – மூவரின் நிலைமை கவலைக்கிடம்

0
ரம்புக்கனை சம்பவத்தில் காயமடைந்த 13 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 34 வயதுடைய குடும்பஸ்தர்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...