லஞ்சம் பெற்ற முன்னாள் அதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை

கிழக்கு சீன நகரமான நான்ஜிங்கின் (Nanjing) முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி ஒருவருக்கு, மூன்று தசாப்தங்களாக $325 மில்லியன் மதிப்பிலான இலஞ்சங்களைப் பெற்ற குற்றத்திற்காக திங்கட்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்றான இந்த வழக்கில், கைமாறாகப் பெற்ற இலஞ்சத் தொகையின் பிரம்மாண்ட அளவின் அடிப்படையில், யாங் யூலின் (Yang Youlin) என்பவர் இலஞ்சம் வாங்கியது மட்டுமின்றி, முறைகேடு, இலஞ்சம் கொடுத்தல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணச் சலவை (money laundering) ஆகிய குற்றங்களுக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

சீன ஜனாதிபதிர் ஷி ஜின்பிங்கின் நீண்டகால ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இவர் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது அரசியல் எதிரிகளை அகற்றுவதற்காகவும் இந்த உத்தியைப் பகுதியளவில் பயன்படுத்துகிறார் என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“திட்டங்களை மேற்கொள்வது, வணிக நடவடிக்கைகள், நில மானியங்கள் மற்றும் உழைக்கும் மூலதனம் (working capital) ஆகியவற்றிற்கு உதவுவதற்கு” கைமாறாகவே யாங்கிற்கு இந்த இலஞ்சங்கள் வழங்கப்பட்டதாக சாங்ஜோ இடைநிலை மக்கள் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1993 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், யாங் 2.21 பில்லியன் யுவானுக்கும் ($325 மில்லியன்) அதிக மதிப்புள்ள “சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை சட்டவிரோதமாக ஏற்றுக்கொண்டார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தனது இறுதி வாக்குமூலத்தை வழங்கிய யாங், “தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்காக ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்” என்று ஜியாங்சு (Jiangsu) மாகாண நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், நரைத்த தலைமுடியைக் கொண்ட யாங், இருண்ட நிற ஜாக்கெட் அணிந்து, சீருடை அணிந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே நிற்பதைக் காண முடிகிறது.

இந்த வழக்கிற்கான பகிரங்க விசாரணைகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு நாட்கள் நடைபெற்றன என்றும், இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

யாங்கின் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவர் இலஞ்சமாகப் பெற்ற முழுத் தொகையையும் மீட்டெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஊழல் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் வரிசையில் யாங் இறுதியாக இணைந்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles