அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமயிலான இந்த நீதியரசர்கள் குழாமில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கீஹான் குலதுங்க ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் பல தரப்பினரால் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நீதித்துறை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் உட்பட, இந்த 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது பல சட்ட மற்றும் அரசியல் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.
இருப்பினும், இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்து உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்திற்கு அரசாங்கம் கட்டுப்படும் என அறிவித்துள்ளது.










