ஐபிஎல் 2024 இன் ப்ளே ஓப் போட்டிகள் நாளை ஆரம்பாகின்றன. முதலாவது ப்ளே ஓப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திலுள்ள கொல்கட்டா நைட் றைடர்ஸ் அணியை இரண்டாம் இடத்திலுள்ள சன்ரைசஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கின்றது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். அத்துடன் இப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு, இன்னுமொரு வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது ப்ளே ஒப் போட்டியில் வெற்றிபெறும் அணியானது, முதலாவது ப்ளே ஓப் போட்டியில் தோல்வியடையும் அணியுடன் மோத வேண்டும்.
இரண்டாவது ப்ளே ஓப் போட்டியில் மோதவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி முதலாவது போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் மோதியே இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும்.
எனவே ப்ளே ஓப் சுற்றில் இரண்டு கொலிபயர் போட்டிகளும், ஒரு எலிமினேட்டர் போட்டியும் நடைபெறவுள்ளன. எனவே எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது.
இறுதிப்போட்டியும் அதற்கு முன்னைய போட்டியும் சென்னையில் நடைபெறவுள்ளதுடன் தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழையானது போட்டிக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
(பேனா)