Home Blog Page 2687

மோட்டாா் வாகனம் பதிவு செய்யும் திணைக்கள அதிகாரியொருவர் கைது

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
3 மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தமை மற்றும் ஆவணங்களை அச்சிட்டமை போன்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகலை மற்றும் காலி ஆகிய 8 மாவட்டங்களுக்கே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராச்சி நிறுவகம் அறிவித்துள்ளது

இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும்.! ஜீவன்

” இந்த அரசுமீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன்.”- என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே பாதை காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07.11.2021) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். இவ்விரண்டு விடயங்களையும் சிறப்பாக செய்துமுடித்தால் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தானாகவே நடக்கும்.

நன்றி மறக்ககூடாது என அனுசியா அம்மையார் குறிப்பிட்டார். எனவே, நெருக்கடியான கால கட்டத்திலும் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்ட வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொருட்களின் விலையேற்றத்தால் மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுமீது அதிருப்தியில் உள்ளனர். இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்நிலைமை நீடிக்கின்றது. எனவே, பொறுமை காக்கவும். இன்னும் ஒரு வருடத்துக்குள் நிலைமை சீர் செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன்.”- என்றார்.

அரசு வீழ்வது உறுதி – மக்கள் ஆட்சிக்காக அணிதிரள்வோம்! ராதா அழைப்பு!!

” இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று (07.11.2021) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பளம் இன்னும் முறையாக – முழுமையாக கிடைக்கவில்லை. சம்பளப் பிரச்சினை ஒருபுறம். மறுபுறத்தில் விலையேற்றம் என்ற தாங்க முடியாத சுமை.
சமையல் எரிவாயு, பால்மா மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இதனால் வாழ்க்கை சுமையும் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் என அனைவரும் இன்று வீதிக்கு இறங்கிவிட்டனர். யார் வேண்டுமானாலும் எப்படியும் பொருட்களை விற்கலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி வீழ்வது உறுதி. நல்லதொரு அரசை உருவாக்க மக்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.”- என்றார்.

இந்த ஆட்சி கவிழும் – சஜித் தலைமையில் மக்கள் ஆட்சி மலரும்! திகா சூளுரை

” மக்கள் எழுச்சிமூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கானதொரு அரசு உருவாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொய்யுரைத்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுப்பதற்கே இந்த அரசு முயற்சிக்கின்றது. இன்று பொய் கூறுவதில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளது.

நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். மக்கள் போராட்டங்கள்மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் தலைமையில் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசொன்றை நாம் உருவாக்குவோம்.

சேதன பசளை திட்டத்தை ஒரே நாளில் செயற்படுத்தவிடமுடியாது. அதற்கு நீண்டகால திட்டம் வேண்டும். ஒரே தடவையில் செய்வதற்கு முற்பட்டதால்தான் இன்று விவசாயிகள் போராடுகின்றனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உடனடியாக உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” -என்றார்.

க.கிஷாந்தன்

புஷ்வாணமாகியது ஜனாதிபதியின் புரட்சி – பொகவந்தலாவையில் போட்டுத்தாக்கினார் மனோ!

” விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?

தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யபோவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசி பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசு தோல்வி கண்டுள்ளது.

விவசாய அமைச்சரின் மட்டுமல்ல இராஜாங்க அமைச்சரின் கொடுப்பாவியையும் எரிக்க வேண்டும் என்கின்றனர். இவ்விருவரின் மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

எமது பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வேண்டும். யாரோ பெத்த பிள்ளைக்கு, யாரோ பெயர் வைப்பதுபோல தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு சிலர் இன்று பெயர் வைக்கின்றனர்.” – என்றார்.

க.கிஷாந்தன்

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் மீண்டும் வரையறைகள் கடுமையாக்கப்படும் ?

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் சுகாதார நடைமுறைகளையும் வரையறைகளையும் கடுமையாக்க நேரிடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளாா்.
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் வரையறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நோய் நிலைமை பரவலடையும் தன்மைக்கு ஏற்ப நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்

எதிர்ப்பு எதிரொலி…. ஜெய் பீம் படத்தில் அதிரடி மாற்றம் செய்தது படக்குழு

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.
இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் படத்தில் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இதுவே எதிர்ப்புக்கும் காரணமானது.
இதையடுத்து அந்த காட்சியில் படக்குழு மாற்றம் செய்துள்ளனர். அந்த காலண்டரில் வன்னியர் சங்க குறியீடுக்கு பதிலாக சாமி படம் இருப்பது போல் மாற்றி அமைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஜெய் பீம் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து போராட்டம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07.11.2021) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்று, விலையேற்றத்தைக் கண்டித்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

” அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும். வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணம் வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்.” எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை! – விசாரணையில் வெளியானது கொலைக்கான காரணம்

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி – சமித்புர பகுதியை சேர்ந்த கணவன், மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்திற்கு அடிமையான பெண்ணிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் இருந்து மொஹமட் சஷி பாத்திமா மும்தாஸ் என்ற 42 வயதுடைய பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்த பெண், கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என, குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாத்திமா கடந்த 28ம் திகதி மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த தோழி ஒருவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.

இந்நிலையில், பாத்திமா முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி மோதர பகுதியில் சென்றதாக பாத்திமாவின் தோழி சித்தி ரோஷனா (36) பொலிஸாரிடம் தெரிவித்தார்.

எனினும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​பாத்திமாவின் தோழி கூறியது முரண்பாடாக இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியதற்காக ரோஷனா மற்றும் அவரது கணவர் ஆனந்த பாபு ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் நடத்திய விசாரணையில், பாத்துமாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் இந்த தம்பதியினர் சடலத்தை சூட்கேஸில் அடைத்து கடந்த 29ம் திகதி லொறி ஒன்றில் எடுத்துச் சென்று சப்புகஸ்கந்த – மாபிம வீதியிலுள்ள குப்பை மேட்டில் வீசிச் சென்றுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய மற்றைய நபர் பாத்திமாவின் தங்க நகைகள் மற்றும் பணத்துடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சடலத்தை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

யாழில் 17 சபைகளிலும் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும்!

0
"எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட...

யாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

0
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்." - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்.காங்கேசன்துறை ரயில்...

தாய், மகள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

0
பொலன்னறுவை மாவட்டத்துக்குட்பட்ட திம்புலாகல எல்லவெவ வாவியில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். தாய், மகள் மற்றும் இளம் தம்பதியினர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை...