Home Blog Page 275

சர்வதேச நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கிழக்கிலும் ஆரம்பம்!

சர்வதேச நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கில் யாழ்ப்பாணம் – செம்மணியில் நடைபெற்று வரும் நிலையில், கிழக்கில் அம்பாறை – திருக்கோவில், தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாகவும் அந்தப் போராட்டம் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் கலந்துகொண்டுள்ளனர்.

மன்னாரில் நாளை பொது முடக்கம்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் நாளை திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் பொது முடக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் பொது முடக்கப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் காற்றாலைத் திட்டத்துக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை 57 ஆவது நாளாகப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் .அனைத்து செயற்பாடுகளையும் முழுமையாக நிறுத்தி சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் பொதுப்  போக்குவரத்து கள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் நாளை  திங்கட்கிழமை கடமைகளுக்குச் செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமாகும். இந்தப் பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும். பின்னர் அங்கு எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்படும்.

இந்தப் போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும். போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதிக்குக் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபருக்குக் கையளிக்கப்படும்.

எனவே, மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.” – என்றார்.

மஹிந்தவை சந்தித்த இதொகா உயர்மட்ட பிரதிநிதிகள்!

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கட்சியின் நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று (28) தங்காலை, கால்டன் இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சுகநலம் விசாரித்தனர்.

நடுநிசியில் முச்சந்தியில் பூஜை நடத்திய மர்ம கும்பல்: பின்னணி என்ன?

ஹங்குராந்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோவாஹெட்ட ஹோப் தோட்ட கீழ் பிரிவில் முச்சந்தியொன்றில் பூஜை பொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

மர்ம கும்பலொன்று நள்ளிரவு வேளையில் எதற்காக இவ்வாறு பூஜை நடத்த வேண்டும், புதையல் தோண்டும் நோக்கம் இதன் பின்புலத்தில் இருக்குமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இது பற்றி தாம் ஹங்குராந்கெத்த பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறினர்.

முச்சந்தியில் விலங்குகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகளும் இருந்துள்ளன. இவ்விடயத்தில் வேள்வி பூஜையேனும் நடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் இச்சந்தியில் இப்படி நடந்ததில்லை எனவும், தற்போது நடந்துள்ளதால்தான் சந்தேகம் ஏற்படுகின்றது எனவும் பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

க,யோகா

யாழில் 4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்: எம்.பிக்களும் பங்கேற்பு!

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இன்றைய போராட்டத்தில் யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரும் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர் .

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு நேற்றைய போலீசார் ராணுவத்தின் அடாவடித்தனத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் இன்று கலந்துகொண்டு ஆதரவு வழங்கினர்.

எப்படி சுகம்? மஹிந்தவை சந்திக்க கால்டன் இல்லம் சென்றார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்தார்.

தங்காலை, கால்டன் இல்லத்துக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தவை சந்தித்து, அவரிடம் சுகநலம் விசாரித்தார்.

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா ஜனாதிபதியின் விசா ரத்து!

 

காசா மீதான இஸ்ரேல் போருக்கு கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே இஸ்ரேலுடனான உறவை கடந்த ஆண்டு கொலம்பியா முறித்து கொண்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் சென்றிருந்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அங்கு சென்றபோது அவரை கண்டித்து பாலஸ்தீன ஆதரவு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் குஸ்டாவோ பெட்ரோவும் கலந்து கொண்டார்.

அப்போது காசா மீதான இஸ்ரேல் போரை இனப்படுகொலை என விமர்சித்தார். மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள் டிரம்ப்பின் உத்தரவுக்கு இணங்கக்கூடாது எனவும் கூறினார்.

இதனையடுத்து நாட்டில் வன்முறையை தூண்டியதாக குஸ்டாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஐ.தே.க. தலைமைப்பதவியை ஏற்கத் தயார்!

” ஐதேகவின் தற்போதைய தலைவர் உட்பட கட்சியிலுள்ள அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் கட்சி தலைமைப்பதவி ஒப்படைக்கப்பட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்.”

இவ்வாறு ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐதேக தலைமைப்பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஆசிய கிண்ணம் யாருக்கு? இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஆசிய கிண்ண டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று தனது பிரி​வில் முதலிடம் பிடித்​திருந்​தது. தொடர்ந்து சூப்​பர் 4 சுற்​றி​லும் 3 ஆட்​டங்​களில் வெற்​றியை பதிவு செய்​திருந்​தது.

அதே வேளை​யில் சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி லீக் சுற்று மற்​றும் சூப்​பர் 4 சுற்​றில் தலா 2 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது.

ஆசிய கோப்பை வரலாற்​றில் பாகிஸ்​தான் அணி முதன்​முறை​யாக தற்​போது​தான் இறு​திப் போட்​டி​யில் விளை​யாடு​கிறது. அந்த அணி லீக் சுற்​றில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், சூப்​பர் 4 சுற்​றில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் (1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023) வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டி வடிவிலும், ஒரு முறை டி 20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா வாகை சூடி உள்ளது.

பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இந்த இரு முறையும் 50 ஓவர் வடிவில் தொடர் நடத்தப்பட்டிருந்தது. டி 20 வடிவில் பாகிஸ்தான் அணி தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

இதயம் நொறுங்கிப்போய் இருக்கிறேன்! விஜய் உருக்கம்

 

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
‘ கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரதமர் மோடி இச்சம்பவம் தொடர்பில் தனது எக்ஸ் தள பதிவில்,

” தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

“பாரதியன்ஸ் பிரிமியர் லீக்” கிரிக்கெட் போட்டி!

0
பதுளை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "பாரதியன்ஸ் பிரிமியர் லீக்" கிரிக்கெட் போட்டி! பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சாணம் வீச்சு!

0
நிதி அமைச்சின் செயலாளரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சாணம் வீச்சு! நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது சிலரால் முட்டை...