Home Blog Page 3777

இலங்கையின் 75ஆவது பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு – டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு!

பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) முன்வைக்கப்படவிருப்பதால் நாடாளுமன்றம் நாளை (17) பிற்பகல் 1.40 மணிக்கு கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.
இதன் பின்னர் மஹிந்த ராஜபக்சவினால் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படும், இது இந்நாட்டின் 75ஆவது வரவுசெலவுத்திட்ட அறிக்கையாக அமையும்.
2021 ஆம் நிதி ஆண்டில் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு 2678 பில்லியன் ரூபாவையும், இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ 2900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டதாகக் கடன்களைத் திரட்டுவதற்காகவும் ஒதுக்கீட்டுச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.
பிரதமரினால் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படும். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் முற்பகல் 9.30 மணி முதல் 5.30 மணிவரை நடத்தப்படும்.
இதன் பின்னர் வரவுசெலவுதிட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரை நடத்தப்படும். டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நாளையதினம் (17); முதல் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் முழுமையான காலப்பகுதியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
நாளையதினம் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுடன், வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படும் காலப்பகுதியில் சபாநாயகரின் கலரியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பொதுமக்கள் கலரி மற்றும் ஊடகவியலாளர் கலரி என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நிதி அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக ஏற்பாடு செய்யப்படும் தேனீர் விருந்துபசாரம் இவ்வருடம் இடம்பெறவிருக்கின்றபோதும், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்காக மாத்திரம் இது மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
கொவிட் 19 சவால் காரணமாக வரவுசெலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விருந்தினர்களைப் பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முடியாது

20 ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு ஆளுங்கட்சி பக்கம் ஆசனம்!

அரவிந்தகுமார், டயானா கமகே ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவால் இதற்கான கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியின் ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி பகுதியிலேயே தனியாக ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

’20’ இற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சி பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு, எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாணத்தில் சாதனை படைத்த மாணவி!

ஊவா மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இதுவரைகாலமும் வெளிவந்த பரீட்சை பெறுபேற்று புள்ளிகளில் தமிழ் மொழிப்பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளார் பது/ விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி புண்ணியமூர்த்தி அகலியா (194 புள்ளி).
இவரை பாடசாலை சார்பாக வாழ்த்துவதோடு குறித்த பரீட்சை புள்ளி பெறுபேறு, ஊவா மாகாண தமிழ் கல்விப்பிரிவிற்கும்,டு பசறை கல்வி வலயத்திற்கும் எம் சமுகத்திற்கும் பெருமையை தேடித்தந்த பெறுபேறாகும் என பலரும் பாராட்டுகின்றனர்.
இம்மாணவியின் கல்வி பெறுபேற்றிற்கு அயராது பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வி புகட்டி வழிகாட்டி பயிற்றுவித்த ஆசிரியர் நடராஜா புவனேஸ்வரனை, அதிபர் ஆசிரியர்கள் சார்பாகவும் பாடசாலை சமுகம் சார்பாகவும் வாழ்த்திப்பாராட்டுகின்றோம் என்று கல்விச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் 43 நாட்களில் 5,668 பேருக்கு கொரோனா!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 668 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியிலான தொற்றாளர்களின் விபரம் வருமாறு,

’20’ ஐ ஆதரித்த டயானாவுக்கு ஆப்பு வைத்தார் சஜித்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த  டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பான விளக்க கடிதத்தை டயானாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானாவை நாடாளுமன்றக்குழுவில் இருந்து நீக்குவதற்கு ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்சி உறுப்புரிமையில் இருந்து அவர் நீக்கப்படவுள்ளார். இதற்கான சட்டபூர்வமான அறிவித்தலே சஜித்தால் அனுப்பட்டுள்ளது.

கம்பளை இந்துக் கல்லூரி மாணவி வரலாற்று சாதனை!

கம்பளை, இந்துக் கல்லூரி வரலாற்றில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் முறையாக 192 புள்ளிகளைப்பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.

கம்பளை கோணடிக்கா தோட்டத்தைச் சேர்ந்த ராஜா, கனகவள்ளி தம்பதியினரின் மகளான
பானு சதுர்சிகா என்ற மாணவியே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

கோணடிக்கா தோட்டத்திலிருந்து பாடசாலை வருவதற்கு உரிய நேரத்தில் பஸ்கள் இல்லை. அதுமட்டுமல்ல அப்பகுதியில் பிரத்தியேக வகுப்புகளும் இல்லை. அப்படி இருந்தும் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கல்லூரியின் அதிபர் எஸ்.ரகு, வகுப்பாசிரியர் ஆர். கிஷாந்தி உட்பட ஆசிரியர் குழாமுக்கு பழைய மாணவர்களும் கல்விச்சமூகத்தினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

 

பிக்பாஸ் புழக் லாஸ்லியாவின் தந்தை காலமானார்

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மரியநேசன் கனடாவிலுள்ள தனது வீட்டில் வைத்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக லொஸ்லியாவின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். மாரடைப்பே உயிரிழப்புக்கான காரணம் என உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாரியநேசனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலையிலுள்ள அவரது சொந்த ஊரில் இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ப/விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தி!

2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய, பதுளை விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
70 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், அதிபர் மற்றும் இம்மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர் என். புவனேஸ்வரன் உட்பட ஆசிரியர் குழாமுக்கு வாழ்த்துகள்.

களுத்துறை மாவட்டத்தில் 803 பேருக்கு கொரோனா!

களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, களுத்துறையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 18 பேர் கர்ப்பிணிகள் என்பதுடன் 9 பேர் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள்.

குறித்த தொற்றாளர்களில் 121பேர் ஹொரணை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், களுத்துறை- அகவலவத்தை பகுதியில் 23 பேரும், பண்டாரகம பகுதியில் 70 பேரும், புளத்சிங்கள பகுதியில் 41 பேரும், தொடங்கொட பகுதியில் 04 பேரும், பேருவளை பகுதியில் 77 பேரும், இங்கிரிய பகுதியில் 90 பேரும், களுத்துறை பகுதியில் 57 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, மதுராவல பகுதியில் 51 பேரும், மதுகம பகுதியில் 67 பேரும், மில்லனிய பகுதியில் 37 பேரும், பாலிந்தநுவர பகுதியில் 11பேரும், பாணந்துறை பகுதியில் 69 பேரும், வாத்துவ பகுதியில் 63 பேரும், வலல்லாவிட பகுதியில் 22 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சூரரைப்போற்று’ படத்தால் கதறி அழுத வடிவேலு!

சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், திரை விமர்சகர்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஓடிடி வரலாற்றில் இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வடிவேலு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா இந்தப் படத்தில் அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது’ என்று கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:

தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்… இவ்வாறு அவர் பதிவு செய்து இருக்கிறார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (09.05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (09.05.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

யாழ்.வைத்தியசாலையில் தீ: மருந்து பொருட்கள் தீக்கிரை!

0
யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என...

3 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன், ரஷ்யா இணக்கம்!

0
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்திற்கு...