Home Blog Page 3866

‘வெளிநாடு செல்லும் தோட்ட தொழிலாளி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள யோசனை’

தோட்ட தொழிலில் இருந்து இடைவிலகி வெளிநாடுகளுக்கு தொழில் பெற்று செல்லும் மலையகத்தவர்கள் மீண்டும் நாடு திரும்பியவுடன் அவர்கள் அதே தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பணியில் இருந்து இடைவிலகி வெளிநாடு செல்லும் மலையகத்தவர்கள் இரண்டு வருடங்களின் பின் மீண்டும் பணியில் இணைத்தால் அவர்களின் சேவை காலத்தில் முறிவில்லாமல் தொடர்ந்தும் வேவையாற்றியதாக கருதி அவர்கள் ஓய்வு பெறும் போது தொடர்ச்சியான ஓய்வூதியத்தை சட்டப்படி வழங்க வேண்டும் என்பதற்காகவே அவர்களின் சேவைக்காலம் முடியுற்றதாக நிர்வாகம் அறிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் வேலை வழங்கப்பட்டால் அவர்கள் புதிதாக பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களாகவே கருதப்பட்டு அதற்கமையவே வேவைக்கால கொடுப்பனவுகள் கணக்கிடப்படும் எனவும் இதனால் தோட்ட நிர்வாகங்கள் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் பெரும் நன்மை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான வஞ்சக செயற்பாட்டினால் வெளிநாட்டில் வேலை செய்து நாடு திரும்பும் தொழிலாளர்கள் பல்லாயிர கணக்கணக்கான ரூபாய்களை இழப்பதாகவும், ஓய்வூதியத்தை செலுத்த வேண்டி ஏற்படும் என்பதனாலேயே தோட்ட நிர்வாகங்கள் அவர்களை மீண்டும் பணிகளில் இணைத்துக்கொள்வதில்லை எனவும் கூறினார்.

மேலும் வெளிநாடுகளில் பணிப்புரியும் தொழிலாளர்கள் சிறு குற்றத்திற்காகவும் கடுமையாக தண்டிக்கப்படுவதாக தெரிவித்த அவர்; சில வேளைகளில் கொலைச் செய்யப்படும் நிலைமை உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறு அவர்கள் கொலைச் செய்யப்பட்டாலும் வெறுமனே தற்கொலை என கூறி சம்பந்தப்பட்ட நாடுகள் தப்பித்து விடுவதாகவும், ஆகவே இந்த விடயத்தில் அந்தந்த நாடுகளில் இயங்கும் இலங்கை தூதரகங்கள் அக்கறையுடம் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போதைய கொவிட் 19 அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடு சென்றுள்ளவர்கள் பல சுகபோகங்களோடு வாழ்வதாக இங்குள்ளவர்கள் நினைத்தாலும்அவர்கள் அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதாக அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

’20’ இறுதியானது அல்ல, திருத்தங்கள் வரும் – அரசாங்கம் அறிவிப்பு

அரசியலமைப்பின்  20 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்கள் சகிதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு எதிரணி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கலாம் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (10) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான கருத்தாடலுக்கு இருவாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பலரும் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பாடுபட்ட தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

எனவே, வர்த்தமானியை நாளாந்தம் திருத்திக்கொண்டு இருக்கமுடியாது. எனவேதான் அனைத்து கருத்துகளையும் உள்வாங்கிய பின்னர், நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது. திருத்தம் மேற்கொள்வதற்கான பொருத்தமான இடமும் இதுவே.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். எனவே, உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானமும் கிடைக்கப்பெறும்.

20 இற்கு எதிரணி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கலாம். அதற்காக கட்சி மாறவேண்டும் என்றில்லை. மாறினால்கூட அதனை தடுக்கமுடியாது.” – என்றார்.

‘ஐ.தே.கவில் இருந்து விலகுவேன்’ – மேர்வின் சில்வா அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக கருஜயசூரிய நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ருவான் விஜேவர்தனவுக்கு தலைமைப்பதவி வழங்கப்பட்டால் ஐ.தே.கவில் அரசியல் பயணத்தை தொடரமாட்டார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேர்வின் சில்வா மேலும் கூறியவை வருமாறு,

” ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர், அவர் தலைமைப்பதவியில் நீடிப்பதற்கு எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும், புதிய தலைவர் தொடர்பில் பேசப்படுவதால் அப்பதவிக்கு தற்போதைய சூழ்நிலையில் கருஜயசூரியவே பொருத்தமானவர்.

அவரை தலைவராக நியமித்து கட்சியை மீட்டெடுத்து அடுத்த தலைவர் பற்றி சிந்திக்கலாம். கருஜயசூரிய அரசியலில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர். எனவே, கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பார்.

ருவானுக்கு தலைமை பதவி வழங்கப்பட்டால் அதனை நான் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ருவானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில்கூட நான் பங்கேற்கவில்லை. எனது எதிர்ப்பையும்மீறி நியமனம் பெற்றால் ஐ.தே.கவை விட்டு விடைபெறுவேன்.” – என்றார்.

கனவை நிறைவேற்றிய சமந்தா

சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010இல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது.

தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

திருமணமான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே உடை விஷயத்தில் பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம்.

அந்த விருப்பத்தை நான் சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்று தொடங்கி உள்ளேன். இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போதுதான் அதனை நிறைவேற்றி உள்ளேன்.

பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு இந்த தொழில் உதாரணமாக இருக்கும். நடிகையாகும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.” இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

‘100’ என்ற இலக்கை எட்டி ரொனால்டோ சாதனை

100 ஆவது சர்வதேச கோல் அடித்து ரொனால்டோ சாதனை படைத்தார்.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார்.

‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார்.

உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – சோகத்தில் மூழ்கியது திரையுலகம்

உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 42 ஆகும். இவர் சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஆவார். திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவரது மறைவு செய்தி சின்னத்திரை பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்

அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு பயணம் சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற சிறப்பை இந்தியாவுக்கும், பெண் இனத்திற்கும் தந்து பெருமை சேர்த்தவர் கல்பனா சாவ்லா. இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில், மார்ச் 17, 1962-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் பெயர் பனாரஸ் லால் சாவ்லா- சன்யோகி தேவி.

கல்பனா சாவ்லா விமானியாக மட்டுமின்றி, வானவூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்காவின் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் ஆசிரியராகவும், அத்துறை ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஜீன் பியர்ரே ஹாரிசனை 1983-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற பின், நாசாவில் நடந்த பல சுற்று நேர்முகத் தேர்வில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995-ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.

கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ். 87-ல் பயணித்த ஆறு விண்வெளி வீரர்களில் கல் பனாவும் ஒருவராக, 1997-ல் ஆயத்தமானார். இரண்டு வல்லுநர்களில் ஒருவராகவும், ஒரே பெண்மணியாகவும் தனது முதல் பயண குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெற்றிகரமான முதல் விண்வெளி பயணத்தில் 10.67 மில்லியன் கிலோ மீட்டர் பயணித்தார். 252 நாட்கள் விண்வெளியில் இருந்து கொண்டு பூமியை சுற்றியுள்ளார். இதற்குமுன், இந்தியரான ராகேஷ் சர்மா 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்திருந்தார். அதனால், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்ணாகவும் இரண்டாவது இந்தியராகவும் கல்பனாவுக்கு இந்த பயணம் பெருமை தேடித்தந்தது.

கல்பனா உட்பட 7 பேர்கொண்ட குழுவுடன் 2003-ல் பயணித்த விண்கலம், தனது 16 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடமே இருந்த நிலையில், விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசா விண்ணோட்ட பதக்கம் மற்றும் சிறப்பு சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கியது.

இந்நிலையில் அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ‘ நார்த்ரோப் க்ரம்மன் ” வர்த்தகரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இது. இதற்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறுகையில், விண்வெளி வீரராக சாதனை படைத்த கல்பனா சாவ்லாவை நாங்கள் மதிக்கிறோம். விண்வெளி பயணத்தில் அவரது பங்களிப்பு தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தியாகம் மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. எங்களது என்ஜி -14 சிக்னஸ் விண்கலத்துக்கு அவரது பெயரை சூட்டுவதில் பெருமிதம் அடைகிறோம் என்று தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலம், வரும் 29ம் திகதி நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவராக லோரன்ஸ் நியமனம்!

மலையக மக்கள் முன்னணியின் புதிய செயலாளர் நாயகமாக பேராசிரியர் எஸ் விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக பதவி வகித்த ஏ. லோரன்ஸ் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் கொழும்பில் இன்று கூடியது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது என முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அரசியல்துறை தலைவர் அரவிந்தகுமார் எம்.பி., பொதுச்செயலாளர் லோரன்ஸ், பிரதிச்செயலாளர் விஜயச்சந்திரன் உட்பட உயர்பீட கவுன்சில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

” பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் மலையக மக்கள் முன்னணியை மறு சீரமைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக இன்று கட்சியின் புதிய செயலாளராக பிரதி செயலாளராக கடமையாற்றிய பேராசிரியர் விஜயசந்திரன் செயலாளர் நாயகமாக ஏகமனதாக கட்சியின் உயர்பீட அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்த லோரன்ஸ் தொடர்ந்தும் சுகவீனம் காரணமாக தன்னால் செயலாளராக செயற்பட முடியாது என்ற காரணத்தைத் தெரிவித்து தான் அந்த பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு பிரதி செயலாளராக இதுவரை கடமையாற்றிய பேராசிரியர் விஜயச்சந்திரன் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தின்போது முன்னாள் செயலாளர் நாயகம் லோரன்ஸ் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் அவர் கட்சியோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் கட்சியின் உயர்பீடம் அங்கத்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவரை கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பது எனவும் தீர்மானித்து அவரை கட்சியின் பிரதித் தலைவராக ஏகமனதாகத் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த நியமனங்கள் இன்று கட்சியின் உயர்பீட அங்கத்தவர்களால்ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றது. எதிர்காலத்தில் இன்னும் கட்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் இது கட்சியின் நலன் சார்ந்த விடயங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளப்படும் எனவும் தனிப்பட்ட யாருடைய விருப்பு வெறுப்புக்கும் முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது

எனவும் கட்சியில் முழுமையாக ஜனநாயக முறைப்படி உயர்மட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு முடிவுகள் எட்டப்படும் எனவும்எதிர்வரும் வாரங்களில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு அனைவருடைய ஒத்தழைப்புடனும் இன்னும் பல மாற்றங்கள கொண்டுவரப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,955 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 9 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,955  ஆக அதிகரித்துள்ளது.

180 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

புலம்பெயர் இலங்கையர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அழைப்பு

” புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்தவித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்.” -என்று புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களை சந்தித்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர்,

கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகை தந்த புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம், குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால் நீங்கள் பலர் நாட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து வெளியேறியுள்ளது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

எமது அரசு உங்களிற்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அத்துடன் உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால் நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தலாம்.

குளிர் – பனி என்று பாராமல் உங்களை வருத்தி நீங்கள் உழைக்கும் பணத்தை உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு எமது அரசு என்றும் உங்களிற்கு பக்க பலமாக செயற்படும்.

எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பண்மடங்கு அழகிய மற்றும் வளம் கொழிக்கும் உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து பயணிப்போம் என மேலும் புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...