வடக்கு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கினால்போதும். அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. அதனை வழங்குவதற்கு நாம் இடமளிக்கபோவதுமில்லை – என்று ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
அதிகாரப்பகிர்வுக்கு இடமளிக்கமாட்டோம் – ராவணா பலய
Himalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்
உங்களை பிரம்மிப்பூட்டும் மற்றும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு பனிக்குழந்தையே இமயமலை.ஆண்டுதோறும் வளரும் இமயம், 5 நாடுகளின் பாதுகாவலனாக திகழ்கிறது. அறிவியலையே ஆர்வம்கொள்ள வைக்கும் பல அற்புதங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது.இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய இமயமலை,பல மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இமயம் எப்போதுமே ஒரு வியப்பு தான். தன்னுள் பல ஆச்சரியங்களை அடக்கி வைத்து வானுயர்ந்த நிற்கிறது இமயமலை. ஆன்மிகம், புவியியல், அட்வென்சர், சுற்றுலா என பலதரப்பட்ட மக்களையும் தன்பால் ஈர்த்திருப்பது இமயமலையின் தனிச்சிறப்பு என்று கூறலாம்.
சூப்பர்ஸ்டாரில் இருந்து சாமானிய மனிதர் வரை பலரை கண்டிருக்கும் இமயமலையில் இருக்கும் ஐந்து மர்மமான இடங்களை குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் அறிந்துக்கொள்ளவிருக்கிறோம்.
குருடோங்மர் ஏரி

டீஸ்டா நதியின் மூலமாக விளங்கும் இந்த ஏரி,கஞ்சன்சுங்கா மலைத்தொடரில் ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது.நீங்கள் இப்போது இந்த ஏரிக்கு சென்றாலும் அல்லது கடுமையான குளிர்காலத்தில் சென்றாலும் கூட ஏரியில் உறைந்து போகாத ஒரு சிறிய இடத்தைக் காண்பீர்கள்.அதன் மர்மத்தை பொறுத்த வரையில், புகழ்பெற்ற பௌத்த குரு பத்மசம்பவா அவர்கள் ஏரியில் அந்த இடத்தை தொட்டு, மக்கள் பயன்பெற அந்த நீர் உரையாமலிருக்க ஆசீர்வதித்தார் என்று இன்றளவும் அங்கு வாழும் மக்களால் நம்பப்படுகிறது.உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ, மிகக் கடுமையான குளிர்காலத்தில் கூட சுற்றுலா வாசிகளும், உள்ளூர் மக்களும் அந்த ஏரியில் உரையாமலிருக்கும் அந்த சிறிய பகுதியை கண்டு வியக்கிறார்கள்.
ரூப்குண்ட் ஏரி

ரூப்குண்ட் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் அழகான மலைப்பிரதேசத்தில் ஒன்றாகும். இதற்கு பிரம்மிக்கக்கூடிய வகையில் பல சிறப்புகள் இருந்தாலும் ,ஒரு பரபரப்பான மர்மம், சுற்றுலாவாசிகளை இங்கு வர ஆர்வத்தை தூண்டுகிறது. இதன் மர்மம்,ஏரியின் அருகில் உள்ள பாறைகளில் சிதறிக் கிடக்கும் மனித மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் மற்றும் எலும்புகள். இங்கு மலையேறும் மனிதர்களின் பல புகைப்படங்கள் மற்றும் பார்வையாளர்களின் கணக்குகளில் பகிரப்பட்ட புகைப்படங்களே ஆதாரமாக விளங்குகிறது. இந்த எலும்புக்கூடுகள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற படையினர் மலையேற்றத்தின் போது பெரிய ஆலங்கட்டி மழையால் தாக்கப்பட்டனர் என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. மற்றொரு கோட்பாடு இவை ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறுகின்றன, இந்த வழியில் இறப்பதற்கு அவர்கள் ஒரு தெய்வத்தால் சபிக்கப்பட்டனர் என்றும் கூறுகின்றன.எதுவாயினும், இவை அனைத்தும் செவிவழிக் கதைகளாகவே உள்ளது. இதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் உறுதியாக கூற மாட்டோம்.ஏனெனில் ரூப்குண்ட் ஏரி இன்றளவும் மர்மத்தின் புகலிடமாகவே விளங்குகிறது.
பாரோ தக்சங் அல்லது புலியின் கூடு

பூட்டானின் ஒவ்வொரு பயணத்திலும் இன்றியமையாத, செங்குத்தான மலை முகட்டிலுள்ள இந்த பெளத்த மடாலயம் பற்றி கூற ஒரு கதை உள்ளது. இந்த மடத்தின் மையத்தில், ஒரு குகை உள்ளது.இங்கு குரு பத்மசம்பவா மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள், மூன்று வாரங்கள், மூன்று நாட்கள் மற்றும் மூன்று மணி நேரம் தியானித்தார்.
இங்குள்ள மர்மம் அது அமைந்திருக்கும் இடமே ஆகும். மிகக் கடினமான இந்த மலையேற்றத்திற்கு குரு பத்மசம்பவா திபெத்திலிருந்து ஒரு புலியின் மீது பறந்து இந்த இடத்தை அடைந்தார் என்பதால் இவ்விடம் புலியின் கூடு என்று அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
காலம் கடந்து நிற்கும் இந்தியாவின் 12 தொன்மையான நகரங்கள்!
மேற்கண்ட படத்தில் அந்த ஆபத்தான இருப்பிடத்தைப் கண்டால் நம்பிக்கையும் உண்மையாகத் தோன்றலாம். இந்த மடாலயம்,1692 ஆம் ஆண்டில் தியான மண்டபமாக கட்டப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு அறிய சாதனையாகும்.
கங்கர் புயென்ஸம்

உலகின் மிக உயரமான, மனிதக் காலடி படாத இடமாக விளங்குகிறது கங்கர் புயென்ஸம். பூட்டானில் அமைந்துள்ள இந்த மலை பல முறை அளவிடப்பட்டுள்ளது. ஆனால் அளவிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அது மனித அளவீட்டின் தவறாகக் கூட இருக்கலாம். என்றாலும், இந்த மலையின் உச்சியை மனிதன் அடைய முடியவில்லை என்பதே உண்மையாகும். பூட்டானியர்கள் இங்கு எடிஸ் மற்றும் கடவுள்கள் உள்ளிட்ட புராண உயிரினங்களின் இருப்பிடமாக இருப்பதாக நம்புகிறார்கள். அதன் உச்சியை அடைய முற்பட்டு பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, இந்த மலைகள் புகழ்பெற்றன. விவரிக்கப்படாத சப்தங்கள், மர்ம விளக்குகள் மற்றும் மாயத்தோற்றங்கள் உள்ளிட்ட விசித்திரமான நிகழ்வுகளின் வழக்குகள் மலைக்கு அருகில் வசிப்பவர்களிடமிருந்து பதிவாகியுள்ளன.
ஞாங்கஞ்ச்

அழிவில்லாதவர்களின் நகரம் என்று அழைக்கப்படும் ஞாங்கஞ்ச் இமயமலையின் தொலைதூர, அணுக முடியாத பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தை அறிய மலையேறுபவர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைகின்றன. நவீன செயற்கைக்கோள்கள் மற்றும் பிற மேப்பிங் தொழில்நுட்பங்களால் கூட அதை கண்டறிய முடியவில்லை.குறிப்பாக திபெத் மற்றும் இந்தியாவை சேர்ந்த பௌத்தர்கள், ஞாங்கஞ்ச் ஒரு இடம் மட்டுமல்ல, உயர்ந்த பரிமாணமும் என்று கருதுகின்றனர். முனிவர்கள், யோகிகள் மற்றும் பிற தகுதியான ஆத்மாக்களால் மட்டுமே ஞாங்கஞ்சைக் கண்டுபிடித்து அடைய முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கு தங்க விரும்புவோர் அழியாமையைப் பெறுவார்கள்! என்று நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ளது, ஆனால் சில புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர்கள் இதைப் பார்வையிடுவதாகக் கூறி, இவ்விடத்தை மேலும் பிரபலமடையச் செய்தனர்.
நீங்களும் இமயமலையையும் இந்த மலைகளைச் சுற்றியுள்ள மர்மங்களையும் என்றென்றும் காதலிக்கிறீர்கள் என்றால், அதைப் பற்றி கீழேயுள்ள கருத்துப் பிரிவில் சொல்ல மறக்காதீர்கள்.
– சமயம் தமிழ்.கொம்
ராதாகிருஷ்ணனுக்கு இன்று 68 ஆவது அகவை
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று 68 ஆவது அகவையில் கால்பதிக்கிறார்.
இவர் பொகவந்தலாவ இராணிக்காடு எனும் இடத்தில் பிறந்து பின்பு கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தனது விடாமுயற்சியின் காரணமாக படிப்படியாக ஒரு விவசாயியாக தன்னை வளப்படுத்திக் கொண்டதுடன் சமூக அக்கறையின் காரணமாக அரசியலுக்குள் பிரவேசித்து பிரதேச சபை தலைவராக மாகாண கல்வி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினராக இராஜாங்க கல்வி அமைச்சராக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக இப்படி பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இவர் இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகவும் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேதப்படுத்தி விட்டார்கள்.. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா அதிர்ச்சி புகார்
இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் சினிமாவில் இசை என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயராக இருப்பது இளையராஜா தான். ஒரு காலத்தில் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்த அவர் சென்னை வடபழனியில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் தான் அனைத்து பணிகளையும் செய்வார். கடந்த 40 ஆண்டுகளாக அதே ஸ்டூடியோவில் தான் பணியாற்றி வந்தார். மொத்த சினிமா துறையும் இசைக்காக அந்த ஸ்டுடியோவிற்கு தான் செல்லும். அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்தது அது.
இந்நிலையில் சென்ற வருடம் ஸ்டுடியோ நிர்வாகம் மற்றும் இளையராஜா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை நிர்வாகம் பூட்டியது. அது தொடர்பான பிரச்சினை இன்னும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இது தொடர்பாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். அது ஒரு புறமிருக்க, இன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் இசைக் கருவிகள் திருடு போனதாகவும் தன்னுடைய அறையிலிருந்த இசைக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி இருக்கிறார்கள் என புகார் வைத்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது..
மேலும் பிரசாத் ஸ்டூடியோ உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிலிருந்து வெளியேறி இருக்கும் இளையராஜா சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு தியேட்டரை தன்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோ மாற்றி உருவாக்கி வருகிறார் என கூறப்படுகிறது. அந்த ஸ்டூடியோ விரைவில் செயல்படத் துவங்கும் என தெரிகிறது. அதற்கு ராஜா ஸ்டுடியோ என பெயரிடப் படலாம் என்றும் சினிமாத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 40 வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் பாரதிராஜா இருந்த நிலையில் அந்த ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது எப்படி என பார்ப்போம்.
பிரசாத் ஸ்டுடியோவை உருவாக்கிய எல். வி. பிரசாத் அவர்கள் தான் இளையராஜாவுக்கு அந்த அறையை கொடுத்திருந்தார். அதில் தான் கம்போஸிங் உட்பட அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார். அதற்குப் பிறகு எல் வி பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத் வசம் நிர்வாகம் சென்ற பிறகும் இளையராஜாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் சாய் பிரசாத் நிர்வாகத்திற்கு வந்த பிறகு தான் இளையராஜாவுடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஸ்டுடியோ தொழில் நஷ்டத்தில் இருப்பதால் இளையராஜா இருக்கும் இடத்திற்கு மாத வாடகை கொடுக்க வேண்டுமென சாய் பிரசாத் கேட்டிருக்கிறார். அதற்கும் இளையராஜா தரப்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்காக அக்ரிமெண்ட் போட்டுக் கொள்ளலாம் என்றும் இளையராஜா தரப்பு கூறுகிறது. ஆனால் சில தினங்களுக்கு பிறகு இளையராஜாவை காலி செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார் சாய் பிரசாத். அந்த இடத்தை இடித்துவிட்டு வேறு ஸ்டுடியோ கட்டப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் இளையராஜாவுக்கும் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் பிரச்சனை துவங்கியிருக்கிறது.
அதற்கு பிறகு இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா உள்ளிட்ட சில சினிமா துறை பிரபலங்கள் ஸ்டூடியோ நிர்வாகத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்படி துவங்கிய பிரச்சனை தற்போது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
– நன்றி சமயம் தமிழ்.கொம்
அண்ணாத்த பட கதை இதுவா? ரஜினி படம் பற்றி பரபரப்பாக பரவும் தகவல்
அண்ணாத்த படத்தின் கதை ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அது உண்மையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தினை பற்றி ஒரு சிறிய செய்தி என்றாலும் அது மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே அவர் அடுத்தடுத்த திரைப்படம் மற்றும் அவரது சொந்த வாழ்க்கை பற்றி அதிக அளவு செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
அவர் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு காரில் சென்றது உள்ளிட்ட சில விஷயங்கள் பற்றி அதிகம் செய்திகள் வந்தது. அவர் இ பாஸ் வாங்கிக்கொண்டு தான் அங்கு சென்றாரா என்பது பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பிறகு அவர் முறைப்படி இ பாஸ் வாங்கிய பிறகு தான் சென்றார் என அவர்கள் விளக்கம் கூறப்பட்டது.
மேலும் ரஜினி தற்போது கவனம் செலுத்தி வரும் அண்ணாத்த படத்தினை பற்றியும் சில தகவல்கள் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படம் ட்ராப் ஆகி விட்டது என்று கூட செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அது உண்மை இல்லை என தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆகிவிட்டது என கூறி ஒரு செய்தியும் உலா வருகிறது. ஆனால் அது உண்மையா என்பது கேள்விக்குறிதான். ரஜினியின் கதாபாத்திரத்திற்கு முறைப்பெண்களாக குஷ்பு மற்றும் மீனா இருக்கும் நடிக்கிரகில் என்றும், அவர்களுக்கு நடுவில் ரஜினியை யார் திருமணம் செய்து கொள்வது என போட்டி இருக்கும் எனவும், அதனால் அவர்களில் ஒருவரை திருமணம் செய்தால் மற்றொருவருக்கு ஏமாற்றம் ஏற்படும் என்று வேறொரு பெண்ணை ரஜினி திருமணம் செய்து கொள்வாராம். அதன் பிறகு ரஜினிக்கு மகளாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷையாவது மருமகள் ஆக்கி கொள்ளலாம் என குஷ்பு, மீனா இருவரும் போட்டி போடுவார்களாம். அதில் ஆவது அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா என்பது தான் மீதி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி ஒரு கதை இணையத்தில் உலா வருகிறது.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். சூரி, சதிஷ் உள்ளிட்டவர்கள் காமெடியன்களாக நடித்து இருக்கிறார்கள். மேலும் சிறுத்தை சிவா இயக்கும் படங்கள் அனைத்திலும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பதால் அண்ணாத்த படத்திலும் குடும்ப ரசிகர்களை அதிகம் கவரும் விதத்தில் தான் கதை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் கொரோனா பிரச்சனை காரணமாக அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அது மீண்டும் துவங்க அடுத்த வருடம் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. காரணம் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஷூட்டிங் தற்போதைக்கு துவங்க வேண்டாம் என்கிற முடிவை அவர் எடுத்திருக்கிறாராம். படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கொரோனா பரவல் நின்ற பிறகு தான் ஷூட்டிங்கை துவங்குவது என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
அதனால் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் இரண்டாவது முறையாக அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
நன்றி சமயம் தமிழ்.கொம்
தமிழர்களின் எதிரி சஜித் – ஆதாரத்தை வெளியிட்டார் ஆனந்தகுமார்
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தமிழ் மக்களை எதிரியாகவே பார்த்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
பலாங்கொடை – பெட்டிகலை பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸ, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொலை செய்யப்பட்டதை அவர் இதன்போது நினைவூட்டினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொலை செய்யப்பட்டமையானது, ஒரு அரசியல் படுகொலை என கூறிய அவர், அதனை ஒட்டு மொத்த தமிழ் சமூகமே பொறுப்பேற்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது தந்தையை தமிழ் மக்களே கொலை செய்தார்கள் என்ற எண்ணத்துடன் சஜித் பிரேமதாஸ தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தமைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிராக செயற்பட்டு வருகின்றதை போன்றே, சஜித் பிரேமதாஸவும் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான ஒருவர், ஆட்சி பீடத்திற்கு ஏறும் பட்சத்தில் தமிழ் சமூகமே அடிமைகளாக வாழ வேண்டிய நிலைமை ஏற்படும் என எஸ்.ஆனந்தகுமார் கவலை வெளியிட்டார்.
அதனால், தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பதன் ஊடாக, தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, பெரும்பான்மை சமூகம் அதிகளவில் வாழும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை அந்த பெரும்பான்மை சமூகமே தோல்வியடைய செய்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்ட சஜித் பிரேமதாஸவிற்கு தமிழ் மக்கள் முழுமையாக ஆதரவை வழங்கியிருந்த பின்னணியில், அவர் அந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், வாக்களித்த தமிழ் மக்களுக்கு இன்று வரை நன்றி தெரிவிக்கவில்லை எனவும் ஆனந்தகுமார் கவலை வெளியிட்டார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நன்மதிப்பை வென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வழியை மீறி செயற்பட்ட சஜித் பிரேமதாஸ, தற்போது மீண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கியை அதிகரித்து கொள்ளும் முயற்சிகளை சஜித்; பிரேமதாஸ தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மை சமூகம் அதிகளவில் வாழும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், பெரும்பான்மை மக்களே அவரை புறக்கணித்த நிலையிலேயே, சிறுபான்மை சமூகம் அதிகளவில் வாழும் கொழும்பு மாவட்டத்தை நோக்கி சஜித் பிரேமதாஸ நகர்ந்துள்ளதாகவும் ஆனந்தகுமார் குறிப்பிடுகின்றார்.
இதன்போது, சஜித் பிரேமதாஸ தமிழ் மக்களை புறக்கணிப்பதற்கான சில உதாரணங்களையும் மக்கள் மத்தியில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
மலையக தமிழர்களின் பெரும் தலைவரான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மரணத்தை அறிவிக்க சென்ற முன்னாள் அமைச்சர் மனோ கணேஷனை சந்திக்க கூட சஜித் பிரேமதாஸ மறுத்திருந்ததாகவும் ஆனந்தகுமார் சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாஸவை தான் கையோடு அழைத்து வருவதாக சென்ற மனோ கணேஷன், மீண்டும் மரண வீட்டிற்கு தனியாகவே வருகைத் தந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவர் என கூறிக் கொள்ளும் மனோ கணேஷனையே புறக்கணித்த சஜித் பிரேமதாஸ, தான் பெரும்பான்மை இனத்தவர் என்ற நிலைப்பாட்டில் தனியாகவே ஆறுமுகன் தொண்டமானின் மரண வீட்டிற்கு வருகைத் தந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறுபான்மை சமூகத்தின் தலைவராக கூறிக் கொள்ளும் மனோ கணேஷனுடன் வருகைத் தர மறுத்த சஜித் பிரேமதாஸ, எவ்வாறு தமிழ் மக்களுக்காக முன்னின்று செயற்படுவார் என எஸ்.ஆனந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்கள் எதிர்காலத்தை சிந்தித்து சரியான தலைமைத்துவத்திற்கு நிகழ்காலத்தில் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து VS அயர்லாந்து – 2ஆவது போட்டி இன்று!
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி இன்று (01) நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு சவுதம்டனில் குறித்த போட்டி ஆரம்பமாகும்.
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றிருந்தது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 44.4 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக அறிமுக வீரர் கேம்பெர் 59 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டது. டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
‘இ.தொ.கா. உறுப்பினர்கள்கூட வெற்றிபெற வேண்டும் என நினைப்பவன் நான்’
கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம். விமல் வீரவன்ஸவுக்கு வாக்களியுங்கள் எனத் தேர்தல் பரப்புரை செய்யும் தமிழர்கள், தமிழ் இனத்தின் துரோகிகளாகக் கருதப்படுவார்கள். மலையக மக்கள் தொடர்பில் ‘அப்பா கனவு கண்டார்’ என்று குறிப்பிடுகின்றார்கள். குறுகிய காலத்தில் கனவுகளை முடிந்தவரை நாங்கள் நிறைவேற்றினோம். மலையகத்தில் நாங்கள் செய்த சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க மக்கள் மீண்டும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெயிலா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம் பரம் தெரிவித்தார்.
கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மலையகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் முக்கியமான தேர்தல்.
இந்தநிலையில் கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்கக் கூடாது எனவும், அமைச் சர் விமல் வீரவன்ஸவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறும் தமிழர்கள் தமிழினத்தின் துரோகிகளாகக் கருதப்
படுவார்கள்.
அப்பா கனவு கண்டார் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், மலையகம் தொடர்பில் கனவு கண்டவர்கள் நாங்கள். நாம் கண்ட கனவே இன்று நிறைவேறியுள்ளது. .தமிழ் முற்போக்குக் கூட்டணி யின் தலைவர் மனோ கணேசன் சிறந்த தலைவர். பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது அல்லது தோல்வியடைவது என்பது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் கூட வெற்றிபெற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், அவர்கள் நான் தோல்வியடைய வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.
நான் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் எனது உறவினர்கள் எவருக் கும் எனது அமைச்சில் தொழில் வழங்கவில்லை. எனது மகனுக்கான பெற்றோர் கூட்டங்களில்கூட இதுவரை யில் கலந்துகொண்டதில்லை. மலையகத்தில் நான் இதுவரையில் செய்த சேவையைத் தொடரவே அதிகாரத்தைக்கேட்கின்றேன் – என்றார்.
‘சந்தாவுக்காக மலையகத்தில் நடக்கும் சதிவேலை’
செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் விண்கலம்
செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா விண்கலம் ரோவர் வெற்றிகரமாக ஏவப்பட்டது.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது.
ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் அமெரிக்க விண்கலம் சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த பெர்சிசவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும்.
இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மை குறித்தும், செவ்வாயில் மனிதன் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் பற்றியும் தரவுகளை சேகரிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கிருந்து, பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





