Home Blog Page 3934

உடல் எடையை குறைத்து ஸில்மாக மாறிய நடிகை ஹன்சிகா

தனுஷ் நடித்த மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஆனால் இதற்கு முன்பு ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின் தமிழ், தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

ஆனால் சில வருடங்கள் முன்பு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிம்புவடன் மஹா, பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் சமீப காலமாக ஒர்க் அவுட் செய்து தான் உடல் எடையை குறைத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிமாக எழும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

டோனி தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கம்பீர் கருத்து

நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் டோனி இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வயது என்பது வெறும் நம்பர் தான். நீங்கள் நல்ல பார்முடன் இருந்தாலோ, உண்மையிலே பந்தை நன்றாக அடித்து ஆடினாலோ தொடர்ந்து விளையாடலாம். இதே போல் டோனி பந்தை நன்கு அடித்து ஆடினாலோ, சிறப்பான பார்மில் இருந்தாலோ, ஆட்டத்தை அனுபவித்து ஆடினாலோ மற்றும் தன்னுடைய பேட்டிங் வரிசையில் களமிறங்கி இன்னும் தன்னால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்று நினைத்தாலோ அவர் தொடந்து இந்திய அணிக்காக விளையாடலாம்.

வலுவான உடல் தகுதியுடனும், நல்ல ஆட்டத்திறனுடனும் இருந்தால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனெனில் யாரும், யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. வயதை காரணம் காட்டி டோனி போன்றவர்களுக்கு பல நிபுணர்கள் நிறைய நெருக்கடி அளிக்கலாம்.

ஆனாலும் ஓய்வு என்பது தனிப்பட்டவர்களின் முடிவாகும். கிரிக்கெட்டை எப்போது விளையாட தொடங்குகிறீர்கள் என்பதும், அதில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என்பதும் உங்களுடைய தனிப்பட்ட முடிவாகும்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி முந்தைய எல்லா போட்டிகளையும் விட பெரியதாகும். ஏனெனில் இந்த போட்டி தேசத்துக்கானது என்று கருதுகிறேன். போட்டி எங்கு நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறப்போகிறது. யார் அதிக ரன்கள் குவிக்கிறார். யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பது பெரிய விஷயமல்ல.

ஐக்கிய அரபு அமீரகம் எந்த வடிவிலான போட்டியையும் நடத்துவதற்கு சிறப்பானதொரு இடமாகும். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த ஐ.பி.எல். போட்டி தேசத்தின் மனநிலையை மாற்றப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

39 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ள டோனி இதில் அசத்தினால் மட்டுமே இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு உருவாகும்.

வடகொரியாவுக்குள் ஊடுருவியது கொரோனா – ஊரடங்கும் அமுல்

வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க உன் உயராதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.

நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. இது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டுசெய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவுக்கு 5 தேசிய பாடசாலைகள் – தடுத்து நிறுத்தியது யார்? அம்பலப்படுத்துகிறார் திகா!

நுவரெலியா மாவட்டத்துக்கு ஐந்து தேசிய பாடசாலைகள் அமைப்பதற்கு 2014 இல் அனுமதி கிடைத்திருந்தது. எனினும், இங்குள்ள அமைச்சர் ஒருவரும், விஜேசிங் போன்ற கல்விகற்ற துரோகிகளுமே இதனை தடுத்துநிறுத்தி சமூகத்துக்கு அநீதியிழைத்தனர் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் 25.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த நான்கரை வருடங்களாக மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவையாற்றிவிட்டு, அவற்றை பட்டியலிட்டுக்காட்டியே நாம் வாக்கு கேட்கின்றோம். ஆனால், திகாம்பரம் முன்னெடுத்த திட்டங்கள் சரியில்லை. மோசடி இடம்பெற்றுள்ளது என குறைகூறிதான் சிலர் வாக்கு சேகரித்து வருகின்றனர். நான்கரை வருடங்கள் நான் ஏமாற்றினேனா, சேவையாற்றினேனா என்பது மக்களுக்கு தெரியும். எனவே, வேலைசெய்யாமல் மக்களை இதுவரை காலமும் ஏமாற்றி வந்தவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.

இம்முறை கொழும்பில் மனோவும், கண்டியில் வேலுகுமாரும், பதுளையில் அரவிந்தகுமாரும் வெற்றிபெறுவது உறுதி. நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் மூவரும் வெற்றிபெறுவோம். திலகரையும் இணைத்துக்கொண்டு மொத்தம் 7 பேர் பாராளுமன்றம் செல்வது உறுதி. எனவே, பொதுத்தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது.

நான் உங்களில் ஒருவன், தொழிலாளியின் பிள்ளை. அரசியல்வாதி அல்லது முதலாளியின் மகனாக இருந்து அமைச்சராகியிருந்தால் என்னாலும் உணர்வுபூர்வமாக வேலை செய்ய முடியாமல் போயிருக்கும். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கஷ்டங்களை அனுபவித்ததால்தான் என்னால் மக்களுக்கான சேவையை உரிய முறையில் வழங்கமுடிகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலை இல்லை என்று முத்தையா முரளிதரனின் சகோதரர் பிரபு கூறுகின்றார். நுவரெலியா மாவட்டத்துக்கு 5 தேசிய பாடசாலைகளை அமைப்பதற்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அனுமதி பெற்றிருந்தேன். அப்போது பந்துல குணவர்தனவே கல்வி அமைச்சராக இருந்தார்.

இதனை கேள்வியுற்றதும் இங்குள்ள அமைச்சர் அவசரமாக அதிபர்களை அழைத்து குறிப்பாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் விஜேசிங்க போன்றோர், இங்கு தேசியப்பாடசாலை தேவையில்லை, மாகாண அதிகாரம் இருந்தால்போதும் என கடிதம்மூலம் அறிவித்தனர். அதன்பின்னர் அமைச்சரும், அதிபர்களும் தேசியப்பாடசாலை தேவையில்லை என கூறுகின்றனர், வழங்கமுடியாது என பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இப்படியான துரோகிகளே தேசியப்பாடசாலையை தடுத்துநிறுத்தினர்.” – என்றார்.

க.கிசாந்தன்

இரத்தினபுரி தமிழர்களுக்கு காணி உரிமை – ஆனந்தகுமார் உறுதி!

இரத்தினபுரி – வேவல்வத்தை பகுதியில் வாழும் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

வேவல்வத்தை பகுதிக்கு கள விஜயத்தில் ஈடுபட்ட போதே அவர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இரத்தினபுரி தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகள் தொடர்பிலும் எஸ்.ஆனந்தகுமார் அவதானம் செலுத்தியிருந்தார்.

தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றவுடன் இரத்தினபுரி தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முன்னின்று செயற்படுவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, கள பிரசார நடவடிக்கைகளையும் எஸ்.ஆனந்தகுமார் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியான பனில்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கலந்துக்கொண்டிருந்தார்.

மலையகத்தில் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்துவரும் தாம், இதுவரை காலம் கவனீப்பாரற்று காணப்படுவதாக அந்த பிரதேச மக்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஏனைய தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் சிறிதளவு உரிமையேனும், இலங்கையின் தென் பகுதியில் வாழும் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் எஸ்.ஆனந்தகுமாரிடம் தெரிவித்தனர்.

தான் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த தருணம் முதல் காணி உரிமைகளை இழந்திருக்கும் இரத்தினபுரி வாழ் தமிழ் மக்களுக்கும் காணி உரிமைகளை பெற்றுகொடுக்க முன்னின்று போராடுவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

இதன் ஒரு கட்டமாக 10 பர்சஸ் காணிகளை பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் நாளை ஆரம்பம் – வகுப்பு நேரங்களில் மாற்றம்

‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் நாளை (27) திங்கட்கிழமை முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி காலை 7.30 மணிமுதல் மாலை 3.30 வரை கல்வி நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 05, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்கள் மாத்திரமே நாளை பாடசாலைக்குச்செல்லவேண்டும்.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கையில் ‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (25) மாத்திரம் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் சென்னையில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிக்கப்பட்டவர்களாவர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 2 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளனர். 656 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

தேர்தல் முடிந்தகையோடு தோட்ட கம்பனிகளுடன் பேச்சு!

பொதுத்தேர்தலுக்கு பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.

ஹப்புத்தளை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே எம்மிடம் தொண்டமான் முன்வைத்த இறுதி கோரிக்கையாகும். அதனை நிறைவேற்றுவோம். தேர்தல் முடிந்த பின்னர் கம்பனிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 98 லட்சம் பேர் மீண்டனர்

உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சத்து 35  ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 98 லட்சத்து 2 ஆயிரத்து 994  பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 36 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

சுய தனிமையில் இருப்போருக்கு 31 ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடு!

”  வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு நிலையங்களினூடாக எதிர்வரும் 31 ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.” – என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே தவிசாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஜூலை 31 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்தவும், வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை 4 ஆம் திகதி நடத்தவும் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடனான கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், 4 ஆம் திகதி அதனை மேற்கொள்வது சிரமம் என தற்போது தௌிவாகின்றது. ஏனெனில், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை 4 ஆம் திகதி ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லவுள்ளோம். இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதி நடத்த தற்போது தீர்மானித்துள்ளோம்.

எவரேனும் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் 31 ஆம் திகதி அவர்கள் தமது வாக்கினை பதிவு செய்யமுடியும். குறித்த பகுதிகளில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அரசியல் கட்சிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள வாக்காளர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை சேகரிக்கவும் புகைப்படங்களை எடுத்து பகிரங்கப்படுத்துவதற்கும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...