Home Blog Page 3939

ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் – அரவிந்தகுமார்

தற்போதைய அரசாங்கம் இனவாத ஆட்சியையே முன்னெடுக்கின்றது. தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என கூறுகின்றது. அப்படியானால் எதற்காக அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ. அரவிந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

பதுறையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த கேள்வியை எழுப்பினார்.

எமது மக்கள் மிகுந்த அமைதியாக இருந்து வருகின்றனர். இவ்வகையில் அமைதியாக இருந்து, அடுத்த மாதம் 5ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்திக்கு தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்து, எமக்கும் விருப்பு வாக்குகளை வழங்கி வெற்றிபெற வைப்பார்கள்.

தற்போதைய காபந்து அரசு இனவாதத்தை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகின்றது. தமிழ் முஸ்லிம் மக்களினது வாக்குகள் எமக்குத் தேவையில்லையென்று ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

ஆனால், மாவட்ட ரீதியில் போட்டியிடும் ஆட்சியாளர்களின் கட்சி வேட்பாளர்கள் தமிழ், முஸ்லிம் வாக்குகளைப்பெற பாரியமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, எமது மக்கள் சிந்தித்துச் செயல்படல் வேண்டும்.

கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். அதே 69 இலட்சம் பேரும் ஐக்கிய மக்கள் சக்திக்கே இம்முறை வாக்களிப்பர் என்றும் குறிப்பிட்டார்.

பதுளை நிருபர் – செல்வராஜா

PHI இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(24) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்..

தமது சங்கத்தின் செயற்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களின் உறுப்பினர்கள், கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தடுப்பு செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘வடிவேல் சுரேஷ் இனி கட்சிமாற மாட்டார்’ – ஹரின்

” வடிவேல் சுரேஷ் இனி எம்மைவிட்டு வேறு எங்கும் செல்லமாட்டார். மலையகத்துக்கு தலைமை தாங்கக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பசறையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” அடுத்த மாதம் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் எமது கட்சி சின்னமான தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதன் பின்னர் எமது வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கவும். மூன்று விருப்பு வாக்குகளை வழங்கலாம். அதில் ஒன்றை கட்டாயம் வடிவேல் சுரேசுக்கு வழங்கவும்.

மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய திறமை மிக்கதொரு நபராகவே அவர் இருந்து வருகின்றார். பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்கென  தமது உயிரையும் துச்சமாக நினைத்து செயல்படுபவராவார்.

அவர் இனிமேல் எம்மிடமிருந்து விலகிச்செல்லமாட்டார். தொடர்ந்தும் எம்முடனே இருப்பார். அத்துடன் மலையக மக்களுக்கு தலைமை தாங்கக் கூடிய வரும் அவரேயாகும்.” – என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

கொரோனா நோயாளி தப்பியோட்டம்! கண்டால் உடன் அறிவிக்கவும்!!

அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமை மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக இவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய இந்த நபர் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவரது இடது காலில் ஊனமடந்த நிலை காணப்பட்டுள்ளது. அவர் நடக்கும் போது வித்தியாசமாக இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் முன்னிலை

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான விருப்பு வாக்கு பட்டியலில் ஜீவன் தொண்டமானே முதலிடம் பிடிப்பார் என மலையக இளைஞர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

பொதுத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான ஜீவன் தொண்டமானுக்கு எட்டு திக்கில் இருந்தும் பேராதரவு பெருகிவருகின்றது.

மலையகத்தை மையமாகக்கொண்டியங்கும் சிவில் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகளும், வர்த்தக சமூகம், புத்திஜீவிகள் ஒன்றியம் மற்றும் கலைஞர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகள் ஆகியன ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேறிய இ.தொ.கா. ஆதரவாளர்களும் மீண்டும் அந்தக் கட்சியில் இணைந்து, ஜீவனின் கரங்களைப்பலப்படுத்திவருகின்றனர்.

இவை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே விருப்பு வாக்குப் பட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிப்பார் என மலையக இளைஞர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்ல பிரச்சாரக் கூட்டங்களில் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துவரும் வேட்பாளர்களுக்கு மத்தியில், திட்டங்களை முன்வைத்து, அவை தொடர்பில் விளக்கமளிக்கும் விதத்தில் உரையாற்றும் ஜீவனின் அரசியல் ‘ஸ்டைலானது’ மலையக இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதுடன், புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கான ஆரம்ப புள்ளியாகவும் பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தென்னிலங்கையிலும், வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஜீவனின் அரசியல் அணுகுமுறையை வெகுவாக பாராட்டிவருகின்றனர். சிலர் தொலைபேசி ஊடாகவும், மேலும் சிலர் தமது செயலாளர்கள் ஊடாகவும் இந்த தகவலை ஜீவனுக்கு வழங்கியுள்ளனர்.

எனவே, மலையகத்துக்கு ஏற்றவிதத்திலான தலைமைத்துவமொன்றை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை ஜீவனின் கரங்களைப் பலப்படுத்தி மக்கள் தக்கவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அரசியல் நிபுணர்கள் கருத்து முன்வைத்துள்ளனர்.

விவேக்கின் அம்மா இறந்துவிட்டதாக பரவிய செய்தி: ட்விட்டரில் அவர் கொடுத்த விளக்கம்

விவேக்கின் அம்மா சென்ற வருடம் இறந்த நிலையில், தற்போது தான் அவர் இறந்தார் என்பது போல புதிதாக

சினிமா துறையையும் வதந்திகளையும் பிரிக்கவே முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பற்றி நாள் தோறும் ஏதாவது ஒரு செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கின்றது. குறிப்பாக நடிகர்களின் சொந்த வாழ்க்கை பற்றி வதந்திகள் அதிக அளவில் பரவுகின்றன.

இந்நிலையில் காமெடி நடிகர் விவேக்கின் தாயார் நேற்று இரவு காலமாகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல் பரப்பி விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் விவேக்கின் தாயார் சென்ற வருடமே இறந்துவிட்டார். ஒரு வருடம் கழித்து தற்போது அவர் இறந்தது போல ஒரு செய்தியை விஷமிகள் சிலர் இணையத்தில் பரப்பி உள்ளனர். இது பற்றி அறியாத பலரும் இந்த தகவலை அதிகம் ஷேர் செய்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் ட்விட்டரில் விவேக்கை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் “நடிகர் விவேக் சார் அவர்களின் தாயார் 2019ல் இறந்துவிட்டார். ஆனால் நேற்று இரவுதான் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பபடுகிறது. என்ன ஏது எப்போ என்று சரியாக தெரியாமல் பல பொய்யான தகவல்கள்பரப்பபடுகிறது. ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று சொன்னால் எதையுமே யோசிக்காமல் ஷேர் பண்றாங்க” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறியுள்ள விவேக் “என் தாயார் இயற்கை எய்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.ஆனால் செய்தி பரப்புவோருக்கு அவர் மேல் அவ்வளவு அலாதி பிரியம் போலும்.இந்த வருடமும் இயற்கை எய்த வைக்கிறார்கள்.போகட்டும் விடுங்கள். For me, my mom still lives with me!!” என தெரிவித்துள்ளார்.

 

‘சஜித் ஆட்சியில் நானும் அமைச்சர் – சிறிகொத்தவையும் கைப்பற்றுவோம்’

“ நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியாகும். இவ்வெற்றியின் மூலம் எமது தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பார். அவர் ஆட்சியில் அமைச்சராவதற்கு அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பசறை வாரச்சந்தைத் தொகுதியில்  இன்று 23.07.2020ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது வடிவேல் சுரேஷ் மேலும் கூறியவை வருமாறு,

“200 வருடமாக வரலாற்றினைக் கொண்ட எமது உறவுகளுக்கென்று கடந்த நான்கரை வருடங்களுக்கு என்னால் இயன்ற வகையில்இ  பலகோடி ரூபா செலவில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். இந்நிலையில் மீளவும் பொதுத்தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றேன்.

என்னால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணிகளை தொடர்வதற்கு மக்களின் அங்கீகாரத்தைக்கோரியே இத்தேர்தலை  எதிர்கொள்கின்றேன். அதற்கென்ற ஆதரவையும்,அங்கீகாரத்தையும் எனது தொப்புள் கொடி உறவுகள் வழங்குவார்களென்ற அபார நம்பிக்கை எனக்குண்டு.

என்னிடம் ஊழல்கள், மோசடிகள் எதுவும் இல்லை. தூய்மையான கரங்களைக் கொண்டு உணர்வூர்வமாக எம்மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன்.
இக்கூட்டத்தை நடாத்துவதற்கு பசறை பொது மைதானத்தை தருமாறு கோரினோம். சம்பந்தப்பட்டவர்கள் தர மறுத்து விட்டனர். பின்னர் பிரதேச மண்டபத்தை தருமாறு கோரிக்கை விட்டோம். அதுவும் கிடைக்கவில்லை இறுதியில் செய்வதியாத நிலையில் பசறை சந்தைத் தொகுதியில் இக்கூட்டத்தை நடாத்தினோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்   எமது தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார். அவருக்கு ஏற்படுத்திய சதி மற்றும் சூழ்சிகளினாலேயே அவர் தோல்வி கண்டார். ஆனால்   இம்முறை அச்சதி சூழ்ச்சி ஆகியவற்றை முறியடித்து அமோக வெற்றி பெறுவார். அவ்வெற்றியின் மூலம் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஶ்ரீகொத்தவும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.” – என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

‘தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது இந்த அரசு’ – சஜித்

” தற்போதைய அரசினால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் படுமோசமான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பசறை வாரச்சந்தைத் தொகுதியில்  இன்று 23.07.2020ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது சஜித் மேலும் கூறியவை வருமாறு,

” அடுத்த மாதம் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியடைந்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். அவ் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை வடிவேல் சுரேசுக்கு வழங்குவேன்.

வடிவேல் சுரேசிடம் உங்களுக்கு எந்த அமைச்சு வேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறவில்லை. பெருந்தோட்ட மக்களை கௌரவிக்கும் வகையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை வழங்கினால் பொறுப்பேற்பீர்களா என்றும் கேட்டேன். அதற்கு அவர் சரியென்று தலையை அசைத்தார்.

அத்துடன் ரவி சமரவீர,  ஹரின் பெர்னான்டோ ஆகியோருக்கும் முக்கிய அமைச்சு பொறுப்புக்களை வழங்குவேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் எனக்கு வழங்கிய அமோக ஆதரவிற்கு  பிரதி உபகாரமாகவே  அம்மக்களுக்கு சேவையாற்றக்கூடியதொரு அமைச்சான பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை அம்மக்களுடன் இரண்டறக் கலந்திருக்கும் வடிவேல் சுரேசிற்கு வழங்குவேன்.

நான் பிரதமராக பதவியேற்று 24 மணித்தியாலயங்களுக்குள் எரிபொருள்களின் விலையைக் குறைப்பேன். சுயதொழில்கள் மற்றும் வாழ்வாதரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள நூற்றுக்கு 4 வீத வட்டியையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்வேன். வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை தலா இருபதாயிரம் ரூபா என்றடிப்படையில் வழங்குவேன். மக்களிடம் பணபுழக்கத்தை ஏற்படுத்துவேன். ” – என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

மலையக சமூகம் மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்றம் பெறும்! முத்தையா பிரபு

மலையக சமூகம் கல்வியில் மிகச் சிறந்த சமூகமாக மாற்றம் பெற வழி செய்ய வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

மலையக இளைஞர்கள், யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் தற்போது சாதித்து வருகின்றனர். அதேநேரம் எமது தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்திற்கு இன்னமும் போராட வேண்டியிருக்கிறது. அத்துடன், வறுமையின் காரணமாக தந்தை வெளியிடத்திற்கும், தாய் வெளிநாட்டிற்கும் தொழிலுக்காக சென்று விடுகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்வி மீதான கவனம் குறைகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கும் போது, இந்த மாவட்டத்திலேயே அதிக வருமானத்தைப் பெறக் கூடியதாக இருக்கும். அதனால் பெற்றோர் வெளியிடங்குச் சென்று பணியாற்றுவதை நிறுத்த முடியும். இதனால் எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான முதலாவது அடித்தளத்தை இடமுடியும்.

அத்துடன், பாடசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் கல்விக்கான தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும். திறமைகள் கொட்டிக் கிடக்கும் மலையகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்ற முடியும்.

எமது சமூகத்தின் விடுதலை கல்வியில் தங்கியுள்ளது. இளைஞர், யுவதிகள் எப்படி அனைத்துத் துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்துள்ளதைப் போல மகச் சிறந்த கல்விச் சமூகமாகவும் மாற வேண்டும். எமது சமூகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்றுவதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.” என்று முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் மாத்திரம் ‘ இலங்கையர்’ என்றிருந்தால் போதுமா?

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்குபோதே   இந்த அரசாங்கம் இருக்கும் வரை ஒருபோதும் ‘இனம்’ என்பது நீக்கப்படாது என அமைச்சர் விமல் வீரவங்ஸ கூறி எழுந்த நம்பிக்கைளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டார்இருப்பினும் நேற்று பதிவாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை அடுத்து நேற்றிரவு எழுத ஆரம்பித்து இன்று நண்பகல்  முடித்த பதிவை இங்கே பதிவிடுகின்றேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் விநியோகிக்கப்படவுள்ள புதிய டிஜிற்றல் பிறப்பு சாட்சிப்பத்திரத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உத்தேசித்திருப்பதாகக் கூறப்படும் சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டியவை.

நாட்டில் பிறக்கும் அனைவரது பிறப்புப் சாட்சிப்பத்திரங்களிலும் அவர்களது இனம், மதம் போன்ற விடயங்கள் நீக்கப்பட்டு ‘இலங்கையர்’ என்ற பொது அடையாளமே இடம்பெறும் என பதிவாளர் நாயம் என். சீ. விதானகே நேற்று ஊடகங்களிடம் கூறியிருப்பது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த ஒரு மாற்றம் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றது.

அடையாள அட்டையில் இனம் என்ற குறிப்புக்காரணமாக கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிப்பை உணர்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த அறிவிப்பு நிச்சயமாக ஒருவித நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

புதிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் ஒருவரது இனம் மதம் போன்ற விடயங்கள் இடம்பெறமாட்டாது அனைவரும் இலங்கையர் என்றே குறிப்பிடப்படுவர் என்ற செய்தி பிரசுரமாகியதை அடுத்து தனது டுவிட்டரில் கருத்துவெளியிட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன ‘ இறுதியாக நாட்டிற்கு நல்லதொரு விடயம் நாம் சரியான தடத்திலே பயணிக்கின்றோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று பலரும் சாதகமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

விருதுகள் பல வென்ற கேலிச்சித்திரக் கலைஞர் அவந்த ஆட்டிகல இன்று இவ்விதமாக ஒற்றுமையின் பலத்தை வெளிக்காட்டும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தார்.

இவற்றைப்பார்த்த போது எதிர்காலம் குறித்த பெரும்நம்பிக்கைகள் மக்களின் ஒரு சாரார் மத்தியில் எழுந்திருந்ததை உணர முடிந்தது.

இன்னமும் சிலர் இந்தச் செய்தியை வரவேற்றிருந்த அதேவேளை உண்மையில் இடம்பெறவேண்டியது என்ன என்பதையும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மாற்றம் என்பது வெறுமனே ஒப்பனை மாற்றமாக அன்றி நடைமுறையில் அர்த்தபூர்வமான மாற்றமாக அமையவேண்டும் எனத்தெரிவித்திருந்தனர்.

இப்படி ஒரு அறிவிப்பு வந்தபோது தேர்தல் நேரத்தில் இப்படி அறிவிப்பை வெளியிடுவதேன் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை தேர்தலின் போது பெரும்பான்மையின மக்களிடையே கரிசனைக்குரிய விடயத்தை அறிவித்துவிட்டு பின்னர் அந்தக்கரிசனையைப் போக்கியவன் ஏற்பட இருந்த தவறை நிவர்த்தித்து விமோசனம் பெற்றுத்தந்த மீட்பர் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்குவேட்டை நடத்தும் எண்ணம் இருந்திருக்மோ என்ற சந்தேகம் எழுந்தது.

இலங்கையின் கடந்த காலத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறுமனே அரசியல்வாதிகளதும் அதிகாரிகளதும் வார்த்தை ஜாலத்தில் நாம் மயங்கிவிடக்கூடாது என்ற உண்மை புலனாகும்.

2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது பொறுப்புக்கூறல் விடயத்தில் விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்கள் .ஆனால் நடந்தது என்ன என்பதை யாவரும் அறிவர். அரசியல்கைதிகள் விடுதலை காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்களில் அளித்த வாக்குறுதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு செய்தது உண்மை என்றாலும் முழுமை பெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஒரு பெயருக்கு ஒரு அலுவலகம் அமைத்தது உண்மை ஆனால் அதனால விளைந்த பயன் யாது என்றால் இதுவரை ஏதும் இல்லை என்பதே உண்மையாகும்.

அரசியல் தீர்வு தொடர்பாக ஆட்சியாளர்கள் எத்தனை வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள் ஆனால் நடந்தது என்ன ? என்பது அனைவருக்கும் வெளிச்சம்.

அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் பெரும் விடயங்கள் என்பதால் நாட்டுமக்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் அடையாள நடவடிக்கைளையேனும் எடுப்பார்களா என்றால் அதற்கு விடைதேட பல ஆண்டுகள் பின்னோக்கிப்பயணிக்க வேண்டியதில்லை.

மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடமுடியும் எனக்கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு நடந்தது என்ன? கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மாத்திரமே அது பாடப்பட்டமை நினைவிருக்கும். தமிழ் மொழி பேசுவோரை இலங்கையர் என்று இந் த அரசாங்கம் ஏற்க மறுக்கின்றதா ? உள்வாங்க விரும்பவில்லையா ? போன்ற கேள்விகள் அப்போதே எழுப்பப்பட்டன. அரசின் நடவடிக்கையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் கறுப்பு சட்டை அணிந்து தமிழிலும் தேசிய கீதத்தைப் பாடியமை நினைவிருக்கின்றது.

ஒரு அரசாங்கத்தினால் அடையாளத்திற்காக செய்யப்படுகின்ற விடயம் இன்னுமொரு அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் நீக்கப்படுகின்றதென்றால் ஆட்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எத்தகைய நிலைப்பாட்டைக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகும் .

ஆட்சிகள் மாறினாலும் அனைத்து இனமக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் அர்த்தபூர்வமான உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளே அவசியமாகும்.

பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் இலங்கையர் என்று இருப்பதாலே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதாலோ மாத்திரம் நல்லிணக்கத்தைக் நிலைநாட்டி ஒற்றுமையை வளர்க்க முடியாது. ஆனால் அவை அதனை நோக்கிய ஆரம்பத்திற்கான பலமான அடையாள நடவடிக்கைகளாக பார்க்கமுடியும். உண்மையாகவே நல்லிணக்கத்தையும் புரிதலையும் ஏற்படுத்தி இலங்கையர் என்ற அடையாளத்தை மக்களின் மனதில் கட்டியெழுப்புவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு முதலில் தேர்தல்காலங்களில் இனங்களுக்கு இடையே குரோதத்தை வளர்க்கும் பிரசாரங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்தல் போலிச்செய்திகளைப் பரப்புவதை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.

அரசியல்யாப்பில் சிறுபான்மையினருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளையே வழங்க மறுக்கும் அன்றேல் பிடுங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு அவர்களையும் இலங்கையராக உளமார அங்கீரிக்கும் என்பது கேள்விக்குரியது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் – அருண் ஆரோக்கிநாதன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...