Home Blog Page 3940

‘வீட்டுத்திட்டத்தை விமர்சிக்க இ.தொ.காவுக்கு உரிமை கிடையாது’ – ராதா

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சேவைகளை விமர்சிப்பதற்கு சில அரசியல் கட்சிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. குறுகிய காலப்பகுதிக்குள் பல திட்டங்களை செய்து முடித்துள்ளோம். ஆயிரம் ரூபாவை பெறுவதற்காக எமது அழுத்தங்களும் தொடரும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் 23.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகத்துக்கான தனிவீட்டுத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தவர்தான் திகாம்பரம். கடந்த காலங்களில் இருந்தவர்கள் உரியவகையில் செய்யவில்லை. ஆனால், குறுகிய காலப்பகுதிக்குள் திகாம்பரம் சுமார் 7 ஆயிரம் வீகளை நிர்மாணித்துக்கொடுத்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் மலையகத்துக்கு 4 ஆயிரத்து 50 வீடுகள் வழங்கப்பட்டன. 2010 இல் இதற்கான அனுமதி கிடைத்தும் 2015வரை கட்டப்படவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி வந்தபின்னரே குறித்த வீட்டுத்திட்டம் முடிக்கப்பட்டது. எனவே, எமது வீட்டுத்திட்டத்தை எவரும் விமர்சிக்கமுடியாது. உங்களுக்கு பணி செய்வதற்காகமே நாம் அரசியலில் இருக்கின்றோம்.

கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எமக்கு அமோக ஆதரவை தந்தீர்கள். நானும், திகாம்பரமும், திலகரும் பாராளுமன்றம் சென்றோம். மூவரும் சிறப்பாக செயற்பட்டுள்ளோம். திலவர் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படக்கூடியவர். எனவே, அவரை தேசியப்பட்டியலில் உள்ளே கொண்டுபோக வேண்டும். அது எமது கடமை. உதயாவும் சிறப்பாக செயற்படக்கூடியவர். அவர் எம்முடன் களமிறங்கியுள்ளார்.

மாகாண அமைச்சராக இருக்கும்போது கல்வித்துறைக்காக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தேன். கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரும் எனது பணிகள் தொடர்ந்தன. கணித, விஞ்ஞான பாடசாலைகள் மலையக பகுதிகளில் திறக்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரம் அல்ல, எல்லா மாவட்டத்துக்கும் சேவை செய்துள்ளேன்.

முழு மலையகத்துக்கும் எமது சேவை தொடரவேண்டுமானால் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு நுவரெலியா மாவட்ட மக்களுக்கே இருக்கின்றது.  எனவே, எமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினையை ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தீர்த்துவைக்கமுடியாது. கம்பனிகள்தான் அதனை செய்யவேண்டும். ஆயிரம் ரூபாவுக்கும் மேல் தற்போது தேவை. எனவே, குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்காவது கம்பனிகள் முன்வரவேண்டும். அதற்கான எமது அழுத்தங்கள் தொடரும்.

சஜித் பிரேமதாசதான் பிரதமராகவர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.”  -என்றார்.

க.கிசாந்தன்

‘மனோவை பாராளுமன்றம் அனுப்பவேண்டியது தமிழர்களின் கடமை’

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதனால் அவர்கள் தமிழ்க் கட்சிகளைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தமிழ் வேட் பாளர்களுக்கே வாக்களிப்பார்கள். ஆனால் கொழும்பு மாவட்ட நிலைவரம் அவ்வாறானது அல்ல. இதற்கு நேர் மாறானது.

காரணம் இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் வாழு கின்ற மாவட்டம். அங்கு வசிக்கின்ற சிங் கள மக்கள் சிங்கள தேசியக் கட்சிகளுக்கே தமது வாக்குக்களை வழங்குவார்கள். ஆகவே அங்கு இருக்கின்ற தமிழர்கள் தமது வாக்குகளை சிதறடிக்காது தமது விருப்பு வாக்குகளை மனோகணேசன் அவர்களுக்கு வழங்கி கடந்த நாடாளு மன்ற தேர்தலில் கொடுத்த ஆணையை விட பல மடங்கான ஆணையை வழங்க வேண்டிய கடமை உள்ளது.

இந்த ஜனநாயகக் கடமையை இந்த காலத்தின் கட்டளையை கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றேன்.

இலங்லையில் உள்ள தமிழர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் போது அல்லது அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது குரல் கொடுக்கின்ற ஒரு மனிதநேய வாதியாகவே மனோ கணே சன் அவர்களைப் பார்க்கின்றேன்.

தமிழர் தரப்பு நியாயங்களையும் சிங்கள பேரினவாத அரசின் போலிப் பிரசாரங்களையும் தகர்த்து அதன் உண்மைத் தன்மைகளை சிங்கள மக்களுக்கு
வழங்கக் கூடிய பேச்சாற்றல் மற்றும் மொழியாற்றல் உள்ள தமிழ் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். ஆகவே இவ்வாறானவர்கள் என்றுமே தவிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற உண்மையைக் கொழும்பு மாவட்ட தமிழர்கள் புரிந்து அவரை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்ப செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாடு ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதனை அனைவரும் அறிகின்றோம். பார்கின்றோம். இந்த நிலையில் தமிழர்களின் இருப்பைத் தக்க வைக்க, தமிழர்கள் தங்களின் அடையாளங்களுடன் வாழ, அனைத்துப் பகுதிகளிலும் தமிழர் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட நலன் களுக்காக செயற்படுகின்ற தமிழ் அரசியற் கட்சிகள் மற்றும் தமிழர்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை காலம் உருவாக்கி உள்ளது. காலத்தின் கட்டளையை ஏற்று ஒரே திசையில் ஓர் இலக்கு நோக்கி பயணிக்க தயாராவோம். – என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

பாலித்தமீது தாக்குதல் நடத்தியோரை கைது செய்க – செந்தில் தொண்டமான் வலியுறுத்து!

முன்னாள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப் பெரும மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், தாக்குதலை நடத்தியோர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

களுத்துறை, மத்துகம வேகந்தல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டமொன்று தரம்குறைந்ததாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அது தொடர்பில் கண்காணிப்பதற்காக பாலித்த தெவரப்பெரும குறித்த இடத்திற்கு சென்றபோது தாக்கப்பட்டார்.

மக்களின் பிரச்சினைக்காக எப்போதும் குரல் கொடுக்கும் பாலித்த தெவரப்பெரும மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் உள்ள மக்களுக்கு இன, மத பேதமின்றி பணியாற்றும் பாலித்த தெவரப்பெரும மீது நடத்தப்பட்ட தாக்குதல் கட்சி பாகுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சுயதொழில் திட்டம்’

பெருந்தோட்டதுறையில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளில் சுய தொழில் திட்டங்களை ஆரம்பிப்பதன்மூலம் இங்குள்ள இளைஞர் யுவதிகள் அதிகளவில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கலாம் என்று  மலையக மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

அப்கொட் பகுதியில் தன்னை சந்தித்த இளைஞர் யுவதிகள் மத்தியில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,

” மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் எமது இளைஞர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மட்டுமல்ல எமது சமூக கட்டமைப்பிலும் பாரிய சிக்கல்களையும் சவால்களையும் தோற்றுவித்து விடுகிறது.

தேயிலை பயிர்ச்செய்கையில் ஆர்வமில்லாத இளைஞர் யுவதிகளும் கூட அன்றாட வேலைக்காக வெளிமாவட்டங்களுக்கும் நகர்ப்புரங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்கிறார்கள் இவ்வாறானவர்களின் எதிர்காலம் எவ்விதமான உத்தரவாதமும் இன்றி கேள்விக்குறியாகிறது.

இவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்துவதற்கேற்ற அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும்.

இதன் ஒரு கட்டமாக மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளில் பல்வேறு சுயதொழில் திட்டங்களை உருவாக்கலாம். இதில் முதலீடு செய்யுமளவுக்கு தொழிலதிபர்களுக்கு நாம் நம்பிக்கையான செயற்திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
புலம் பெயர்ந்து வாழும் மலையகத்தவர்களின் உதவிகளையும் மலையகம் சார்ந்த தொழில் அதிபர்கள் மட்டுமின்றி எம் சமூகவளர்ச்சியில் அக்கறைக் கொண்ட ஏனைய முதலீட்டாளர்களின் பங்களிப்பையும் இதில் பெற்றுக்கொண்டால் இவ்வாறான திட்டங்களை அமுல் படுத்துவதில் எந்த பிரச்சினையுமே ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

கம்பனிகளிடம் அடிபணியோம்! சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்கு என்கிறார் ஜீவன்!!

 பெருந்தோட்டங்களை, தோட்ட கம்பனிகள் மேலும் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கேட்கின்றன. அதற்கு உடன்பட முடியாது. எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்காகும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை எல்பியன் தோட்டத்தில் 23.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்த கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியால் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாது, அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை என்று சிலர் கூறியுள்ளனர். ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் உறுதியளித்துள்ளனர். எனவே, கம்பனிக்கு தேவையான சலுகைகளை வழங்கி, அழுத்தங்களைப் பிரயோகித்து உரிய நடவடிக்கையை எடுப்பார்கள். மாபெரும் தொழிற்சங்கமான எமக்கும் பக்கபலமாக இருப்பார்கள்.

மேலதிக 2 கிலோ கொழுந்து, மேலும் 25 ஆண்டுகளுக்கு குத்தகை காலத்தை நீடித்தல் உட்பட மேலும் சில நிபந்தனைகளை கம்பனிகள் முன்வைத்தன. அவற்றுக்கு நாம் உடன்படவில்லை. தற்போதே பாதி தோட்டங்களை காடாக்கியுள்ளனர். இந்நிலையில் மேலும் 25 ஆண்டுகள் வழங்கினால் என்ன நடக்கும்? முழு தோட்டத்தையும் நாசமாக்கிவிடுவார்கள்.

100 ரூபாவை வாங்கிக்கொடுத்துவிட்டு நிலுவைக்கொடுப்பனவான 88 ஆயிரம் ரூபாவுக்கு சிலர் வேட்டு வைத்ததுபோல, நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவசரப்பட்டு தவறான முடிவை எடுப்பதற்கு நாம் தயார் இல்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும், எமக்குமிடையில் வித்தியாசம் இல்லாமல்போய்விடும்.

மலையக பல்கலைக்கழகம் அட்டனில் அமையவேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தோம். அதற்கான நிதி ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஓராண்டுக்குள் திட்டம் நிறைவேறும். இதன்படி ஆறுமுகன் தொண்டமானின் ஒரு கனவு நிறைவேறிவிடும்.

அதேவேளை, கடந்த காலங்களில் ஆயிரம் ரூபாவை வைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்தனர். தற்போதும் இதனையே செய்வதற்கு முயற்சிக்கின்றனர். தொழிற்சங்கம் ரீதியாக செய்துமுடிக்கவேண்டிய வேலையைக்கூட அரசியல் மயப்படுத்துகின்றனர். குடிநீர் பிரச்சினை உட்பட எமது மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பில் பேசவேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது, எனவே, நிரந்தர தீர்வு அவசியம். அதற்காக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும்.  அதற்கான திட்டத்தை நாம் முன்னெடுப்போம்.

எமது மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம்கூட உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. எமது இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மாத்திரமே அதுவும் கட்சி மற்றும் தொழிற்சங்கம் பார்த்து வழங்கப்பட்டது. இந்நிலைமையை நாம் மாற்றுவோம். கிராமமொன்றை அமைப்போம். பொருளாதாரத்தையும் பலப்படுத்துவோம். காணி உரிமை பத்திரம் வழங்கிவிட்டார்களாம். அவற்றை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

கங்காரு கட்சி வேட்பாளர்கள் இருவர் திகாவுடன் சங்கமம்!

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கங்காரு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்கள் இருவர், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
கே ஆர் கிஷான் தலைமையில் இலங்கை தொழிலாளர் கட்சி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. தலைவருடனான கொள்கை முரண்பாட்டினையடுத்தே  பொன்னுசாமி ஞானசேகரன், மோகனசுந்தரன் சஞ்சித் எடோன்சன்  இருவர்  இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (23.07.2020) ஹட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்தனர்.
மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் 300 பேர்  முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தோடு இணையும் நிகழ்விலே இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்களும் இணைந்து ஆதரவினை தெரிவித்தமை குறிப்பிடத்தத்தக்கது.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

பாலித்த தெவரபெரும மீதான தாக்குதலுக்கு ஆனந்தகுமார் கடும் கண்டனம்!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும மீதான தாக்குதல், சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே தான் கருதுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

களுத்துறை மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் தமிழர்களை பாதுகாக்க முன்னின்று செயற்பட்டு வரும் பாலித்த தெவரபெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, சிறுபான்மை சமூகத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதை போன்று உணர முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலித்த தெவரபெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பாலித்த தெவரபெருமவை நாகொட வைத்தியசாலைக்கு சென்று எஸ்.ஆனந்தகுமார் இன்று பார்வையிட்டு, அவரின் உடல்நலம் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

மலையகத்திலும் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு பாதுகாவளனாகவே பாலித்த தெவரபெரும இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

பாலித்த தெவரபெரும மீது மிலேச்சத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்த கணம் முதல் தமிழர்களின் இதயங்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் தலைவர்கள் இருக்கின்ற போதிலும், மலையகத்திலும் ஒதுக்கப்பட்ட பகுதிகளான இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளை அவ்வாறான தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என எஸ்.ஆனந்தகுமார் கூறுகின்றார்.

எனினும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரான பாலித்த தெவரபெருமவே, மலையகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாதுகாவளனாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாலித்த தெவரபெருமவின் வழிகாட்டலின் கீழ் தான் ஒதுக்கப்பட்ட மலையக சமூகத்தின் தலைமைத்துவத்தை ஏற்று, அந்த மக்களின் பாதுகாவளனாக செயற்படுவதாக பாலித்த தெவரபெருமவிடம், எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்தார்.

வனிதாவுக்கு பாடி டிமாண்டு அதிகம்: சீனியர் நடிகர் பேச்சால் சர்ச்சை

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணம் முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் கூறினார். மேலும் தனக்கு தன் புருஷன் வேண்டும் என்றும் கூறினார். ஹெலன் புகார் கொடுத்த பிறகு வனிதா விஜயகுமாரை பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் வனிதா என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லாக்டவுன் நேரத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலை துவங்க டெக்னிக்கல் உதவி தேவைப்பட்டபோது பீட்டர் பால் உதவினார் என்றார் வனிதா. பீட்டர் பாலின் படத்தில் நடிக்க கதை கேட்க சென்ற இடத்தில் காதல் ஏற்பட்டு திருமணம் வரை வந்ததாக வனிதா கூறினார்.

ஹெலன் புகார் தெரிவித்த பிறகு ஜூன் 27ம் தேதி நடந்தது திருமணம் என்றும் வைத்துக் கொள்ளலாம், நிச்சயதார்த்தம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். லாக்டவுன் முடிந்த பிறகு முறைப்படி திருமணத்தை பதிவு செய்வோம். அந்த நிஜ திருமணத்திற்கு பூட்டு, சாவி அடங்கிய மோதிரங்களை பயன்படுத்துவோம் என்று வனிதா தெரிவித்தார்.

வனிதாவின் திருமணத்தை பற்றி தான் இதுவரை சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் மூத்த நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனும் வனிதா பற்றி விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

வனிதாவை சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரின் முதல் கணவர் ஆகாஷ் ரொம்ப நல்லவர். வனிதா பிரச்சனையால் அவர் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். வனிதாவுக்கு பாடி டிமாண்ட் அதிகமாக இருக்கலாம். பாடி டிமாண்ட் என்றால் என்ன என்பதை அகராதியில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படம் தயாரிக்க ஆசைப்பட்ட வனிதா ராபர்ட் மாஸ்டருடன் உறவில் இருந்தார். அதன் பிறகு தெலுங்காரர் ஒருவரை திருமணம் செய்தார். யூடியூப் சேனல் துவங்க பீட்டர் பாலுடன் சேர்ந்தார். தேவைப்படம் போது யாரை வேண்டுமானாலும் நண்பராக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் வனிதாவோ அவ்வப்போது திருமணம் செய்து கொள்கிறார் என்றார்.

வனிதா உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பீட்டர் பாலுக்கும், எலிசபெத் ஹெலனுக்கும் விவாகரத்து நடக்காததால் வனிதாவை வேறு பெயர் வைத்து கிண்டல் செய்கிறார்கள்.

ட்விட்டரில் இருந்து வெளியேறிய வனிதா: (அ)சிங்கப்பெண் எங்கே ஓடிட்டாங்கனு கலாய்க்கும் கஸ்தூரி

ட்விட்டரில் வனிதா, பீட்டர் பால் திருமணம் குறித்த விவாதமாகத் தான் இருக்கிறது. நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் வனிதாவை விமர்சித்தார்கள். தன்னை விமர்சித்த அனைவரையும் திட்டிய வனிதா நேற்று முன்தினம் மாலை ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அங்கு தன் வாழ்க்கை தொடர்பாக போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

200 லீற்றர் தாரை களவாடிய இருவர் நோர்வூட்டில் கைது!

நோர்வூட் –  மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் 200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தாரை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (23) அதிகாலை பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து குறித்த லொறியை சோதனைக்குட்படுத்தும்போதே தாரை களவாடிச் செல்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் சாரதியும், உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 13 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O77 ஆக அதிகரித்துள்ளது.

664 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக இருக்கின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...