Home Blog Page 3941

மேல் கொத்மலை திட்டம் – இடம்பெயர்ந்தவர்களுக்கு காணி உரித்தை வழங்க அங்கீகாரம்!

மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது மீள அமைக்கப்பட்ட வீட்டுடன் சேர்ந்த காணிகளுக்கு உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இது குறித்தான அமைச்சரவை தீர்மானம் வருமாறு,

மேல் கொத்மலை நீர் மின்சாரத் திட்டம் 2006ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த திட்டத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடு, கடை மற்றும் வேலைத்தளங்கள் மாற்று இடத்தில் நிர்மாணித்து 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சம்பந்தப்பட்ட நஸ்டஈடு வழங்கும் பணி தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் காணிகளுக்கான உரிமை இதுவரையில் வழங்கப்படவில்லை.

இதனால் மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதினால் இடம்பெயர்ந்த தரப்பினருக்கு மாற்றுத் தொழில் மற்றும் கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை பயனாளிகளுக்கு விடுவிப்பதற்கான உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலையக இளைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுப்பேன் – முரளி உறுதி!

மலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா பசுமலையில் இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே முரளி மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வுபெற்று நேற்றுடன் 10 வருடங்கள் ஆகின்றன. மலையகத்தில் கிரிக்கெட் தொடர்பில் திறமையுள்ள வீரர்கள் இருக்கின்றனர். எனினும், உரிய இடத்துக்கு அவர்கள் வருவதற்கான அடிப்படைவசதிகள் இல்லை.

எமது பவுண்டேசனுக்கு உதவி செய்யும் ஒருவர் லிந்துலையில் இருக்கின்றார். லிந்துலை பகுதியில் மைதானமொன்று இருக்கின்றது, அதனை இலவசமாக தருகின்றேன், விளையாட்டு நிறுவனமொன்றை செய்யுமாறு அவர் கூறினார். அந்த கோரிக்கையை நானும் ஏற்பேன். எனவே, அத்திவாரத்தை போட்டுக்கொடுத்தால், விளையாட்டு வீரர்களுக்குதிறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அடிப்படை வசதிகள் இன்மையாலேயே இங்குள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தமுடியாதுள்ளது.  கிரிக்கெட் என்பது ஓட்டப்போட்டிபோல் கிடையாது. மைதானத்தில் உரிய பயிற்சி பெறவேண்டும். ஆனால், அடிப்படைவசதிகள்கூட இங்கு இல்லை. அதனை ஏற்படுத்திக்கொடுப்பதே எமது நோக்கமாக இருக்கின்றது.

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியில் 10, 15 வருடங்கள் விளையாடிய வீரர்கள் ஓய்வுபெற்றுவிட்டனர். புதிய வீரர்களுக்கு திறமை இருக்கின்றது. அதனை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு சிறிது காலம் எடுக்கும். அதனை நாமும் வழங்கவேண்டும். ஒரே நாளில் சாம்மியனாக முடியாது. எனவே, எதிர்காலத்தில் திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

சங்கா, மஹேல, வாஸ் போன்றவர்களின் இடங்களை நிரப்புவதற்கு காலம் எடுக்கும். அந்த இடத்தை நிரப்புவதற்கு வீரர்களும் முயற்சிக்கின்றனர்.

க.கிசாந்தன்

‘வங்குரோத்து வேட்பாளர்களின் வெத்து அரசியல் கண்டியில் எடுபடாது’

கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வங்குரோத்து வேட்பாளர்களின் சேறுபூசும் அரசியலானது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலாக அமையாது.வாக்காயுதம்மூலம் இம்முறையும் சாதனை படைக்க கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுவிட்டனர். அதுமட்டுமல்ல வெத்து வேட்பாளர்களுக்கும் தக்கபாடம் புகட்டுவார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வேலுகுமாருக்கு நாளாந்தம் மக்கள் ஆதரவு அதிகரித்துவருகின்றது.இந்நிலையில் கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“ 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் மூலம்தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் வென்றெடுத்தனர். இதற்கு முஸ்லிம் சகோதரர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்நிலையில் கடந்த நான்கரை வருடங்களில் என்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்மூலம் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்துவத்தையும் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளதுடன், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமக்கான உரிமை, அடையாளம் என்ற உணர்வும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்முறை மக்கள் வரலாற்று சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.

இதனால் கதிகலங்கிபோயுள்ள சில பேரினவாதிகள், தமிழர்களின் சாதனையை தடுப்பதற்காக பிறப்பால் மட்டுமே தமிழர்களான சில வெத்து வேட்பாளர்களை தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் ஊடாக சேறுபூசும் அரசியலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கைக்கூலிகளை காசுகொடுத்து வாங்கி, மேலும் சிலரை சம்பளத்துக்கு அமர்த்தி போலியான தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இவற்றை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. இருந்தாலும் விழிப்பாகவே இருக்கவேண்டும்.

நேருக்கு நேர் அரசியலில் மோத முதுகெலும்பில்லாதவர்களே, சேறுபூசி அதன் ஊடாக தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தலாம் என நினைக்கின்றனர். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.” – என்றார்.

‘கொரோனா’ – பலி எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 53  லட்சத்து 78 ஆயிரத்து 145 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 93  லட்சத்து  53  ஆயிரத்து 382  பேர் குணமடைந்துள்ளனர். 53 லட்சத்து 94  ஆயிரத்து 441 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 66 ஆயிரத்து 912  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 லட்சத்து 30 ஆயிரத்து 312 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

‘இந்த ஆட்சியின்கீழ் இனவாதம் கொளுந்துவிட்டு எரிகிறது’ – மனோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியின்கீழ் இனவாதம் கொளுந்துவிட்டு எரிகின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுலகத்தில் நேற்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” குருணாகலையிலுள்ள இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச சபை உடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.அதாவது புவனேகபாகு மன்னர், முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் முடித்ததால் அவர் அவ்வளவு பெரிய மன்னன் கிடையாது என்ற தொனியில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார். அது உண்மையா, பொய்யா என எனக்கு தெரியாது, ஆனால், முஸ்லிம் பெண்ணொருவம் திருமணம் முடிப்பது தவறா?

இலங்கையில் கடைசி இராஜ்ஜியம் கண்டி இராஜ்ஜியமாகும். அந்த இராஜ்ஜியத்தை தமிழர் ஒருவரே ஆண்டார். ஶ்ரீவிக்கிரம ராஜசிங்கன் கடைசிகாலத்தில் பிரித்தானியருடன் ஒப்பந்தம் செய்தபோது அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள், தமிழ் மொழியில்தான் கையெழுத்திட்டனர். அதற்கான சான்றும் இருக்கின்றது.

ஶ்ரீவிக்கிரமராஜசிங்கன் கண்டி இராஜ்ஜியத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ராஜ வம்சம் இல்லாதுபோய்விட்டதால், இந்தியாவுக்கு சென்று அவரை அழைத்துவந்து இங்கு சிம்மாசனத்தில் அமரவைத்தனர். இக்கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு இருந்தது. இனவாதம் இருக்கவில்லை. இன்று இந்த ஆட்சியின்கீழ்தான் இனவாதம் கொளுந்துவிட்டெரிகின்றது. இதன் வெளிப்படையாகவே பிரதமர்கூட மேற்கண்டவாறு கருத்து வெளியிடுகின்றார்.

குருணாகலையில் தொல்லியல் சின்னம் தரைமட்டமாக்கப்பட்டது தவறான செயலாகும்.  எனினும், தனது கட்சி மேயர் செய்ததால், குறித்த மன்னன் முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்ததால் அவர் பெரிய மன்னன் அல்ல என பிரதமர் கூறமுற்படுவது அவரின் பதவி நிலைக்கு பொறுத்தமற்ற செயலாகும். ” – என்றார்.

மூன்றிலிரண்டு பலத்தை தாருங்கள் – பிரதமர் மஹிந்த

மொட்டு கட்சிக்கு தெளிவான வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்காக பொது மக்களின் ஆதரவு அத்தியாவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு மாலபே நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாக உடைந்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக இம்முறை வாக்குகளை மொட்டு சின்னத்திற்கு வழங்கி அரசாங்கத்திற்கு உதவுமாறு பிரதமர் இதன்போது பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் இன்று வரையில் தலைமைத்துவமில்லாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கும் அவ்வாறான ஒரு தலைவிதி ஏற்படும் தினம் மிக தொலைவில் இல்லை.

ரணில் விக்ரமசிங்க கடந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் இருந்த போதிலும் நாட்டிற்கு வேலை செய்யவில்லை. இந்த இரண்டு தரப்பும் மக்கள் மத்தியில் தோல்வியடைந்த இரண்டு தரப்புகளாகும். இன்று வரையில் மொட்டு கட்சியின் வெற்றி தௌிவாகியுள்ளது.

அந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக்குவதற்கு மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அனைவரினதும் ஆதரவினை பெற்றுத் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆறுகளை இடைமறித்து மணல் அகழ்வு! தடைசெய்யுமாறு மக்கள் கோரிக்கை!!

ஆறுகளை இடைமறித்து இயந்திரங்களால் மணல் அகழும் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு கோரி பலாங்கொடை வேலிஓய சந்தியில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

வேலிஓயா மற்றும் கால்கன் ஓயா போன்ற ஆறுகள் இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கி வரும் இயற்கை வளம் மிக்க ஆறுகளாகும். இந்த ஆறுகள் இரண்டும் சங்கமிக்கும் இடத்தில் காணப்படும் பாரிய அணைக்கட்டு வழியாக இப்பிரதேச சுய தொழில் செய்யும் பலர் அனுமதிப்பத்திரம் பெற்று மணல் அகழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் இதன்மூலம் மணல் போக்குவரத்து மணல் அகழும் கூலியாட்கள், தரகர்கள் எனப்பலரும் இந்த அணைக்கட்டில் சேரும் மணலினால் நன்மை பெற்று வந்தனர். எனினும் இந்த அணைக்கட்டினை தனியார் நிறுவனம் மணல் அகழ்வுக்காக மத்திய சுகாதார அதிகார சபைக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளமையினால் மணல் அகழ்வை சுயதொழிலாக கொண்டிருந்த கிராம மக்கள் வருமான ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த அணைக்கட்டை குத்தகைக்கு பெற்றுள்ள நிறுவனம் அனுமதிப்பத்திரத்தையும் பெற்று இவ்விடத்தில் இயந்திரம் மூலம் பாரிய அளவில் மணல் அகழ்வு இடம் பெறுவதனால் இயற்கை அழகு மிகுந்த ஆற்றங்கரைகள் கரைந்து வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் நீரைக் குடி நீராகவும் ஏனைய பல்வேறு தேவைகளுக்காகவும் வருவோர் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருதாகவும் பொது மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மேற்படி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகையை இரத்து செய்து பல வருடங்களுக்கு முன்னர் காணப்பட்டது போன்று இந்த அணைக்கட்டின் மூலம் மணலினைக் கீழ்ப்பகுதியில் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறும் இங்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நிழல் உலக தாதா அங்கொட லொக்காவுக்கு நடந்தது என்ன? விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையால் தேடப்பட்டுவரும் குற்றவாளியும் பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார் என புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் வைத்தியசாலையொன்றில் ஒருவாரம் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அங்கொட லொக்காவுடன் இந்தியாவில் வசித்துவந்த முல்லேரியா ரஹ்மான் என்பவரின் மனைவியே  உணவில் விசத்தை கலந்து அங்கொடை லொக்காவை கொலை செய்துள்ளார் என்றும், இதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்புபட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை. அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருணா வெளியேறியது புலிகளுக்கு இழப்பா?

” கருணாவின் பிரிவால் புலிகள் அமைப்பு பிளவுபடவில்லை. இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தை கைப்பற்றினர். இதனால் கருணாவுக்கு கொழும்புக்கு தப்பியோடவேண்டிய நிலை ஏற்பட்டது.” – என்று இறுதிகட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மான் வெயியேறியமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” கருணா வெளியேறினார் என்பதால் புலிகள் அமைப்பு இரண்டாக பிளவுபடவில்லை. இரண்டு வாரங்கள் கிழக்கை,கருணா அம்மான் கைப்பற்றி வைத்திருந்தார். எனினும், பிரபாகரன் தாக்குதல் அணியொன்றை அனுப்பியிருந்தார். வாழைச்சேனை பகுதியில் உள்ள கஜுவத்தை  பகுதிக்கு கடல்வழியாக வந்து, தாக்குதல் நடத்தி கருணாவின் உறுப்பினர்கள் கொன்றனர்.
இத்தாக்குதலால் கருணாவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. 2 நாட்களுக்குள் தம்முடன் இருந்த பெண் போராளிகள், சிறுவர் போராளிகள் ஆகியோரை ஆளுதங்களை போட்டுவிட்டு வீடுகளுக்கு தப்பிச்செல்லுமாறு கூறியதுடன், சுங்காவில் பகுதியில் பிள்ளையானின் முகாமில் தஞ்சமடைந்தார். 150 பேர்தான் எஞ்சினர். அதிலும் பலர் சிறுவர் போராளிகள். அங்கிருந்தும் கொழும்புக்கு அவர் ஓடிவந்தார்.
அதன்பின்னர் ரமேஷ் என்பவர் வீடுகளுக்கு சென்ற போராளிகளை ஒன்றிணைத்து இரண்டு, மூன்று வாரங்களுக்குள் கிழக்கில் பலத்தைக் கைப்பற்றினார். எனவே, கருணாவின் பிரிவால் கிழக்கில் புலிகளின் பலம் குறையவில்லை.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...